ஞாயிறு, நவம்பர் 07, 2010

விஞ்ஞானமும் மெய்ஞானமும்


விஞ்ஞானம் என்பது காலம் காலமாக இந்த பூமியில் உள்ளதை கண்டுபிடித்துக் சொல்வது, விஞ்ஞானிகள் எதையும் உண்டாக்கவில்லை உள்ளதை கண்டுபிடித்துக் சொல்வதற்கே, நம் அறிவை எண்ணி நம்மை நாமே மெச்சிக் கொள்கிறோம், இவற்றையெல்லாம் உண்டாக்கி வைத்திருப்பவனின் பெருமையை, அறிவை சொல்வதே மெய்ஞானம்.

விஞ்ஞானம் என்பது மெய்ஞானத்தின் முன் மைக்ராஸ்கோப்பில் பார்க்கவேண்டிய பொருள், விஞ்ஞானத்தை கொண்டாடும் நாம் அதன் மூலம் கண்டுபிடித்தவற்றைப் படைத்தவனின் அறிவு பற்றி சிந்திப்பதில்லை அதைச் சொல்வது தான் மெய்ஞானம்.

இந்த பிரபஞ்சமே அந்த பிரம்மத்தின் அறிவு தான், உதாரணமாக நாம் இதைத் சொல்லலாம் ஒரு ஓவியன் வரைந்த ஓவியம் அது வரையப் படும் முன் எங்கிருந்தது? ஒரு கற்பனையாக அவன் அறிவில் இருந்தது, அதே போல் தான் இந்த பிரபஞ்சமும் அந்த பிரம்மனின் அறிவு.

தாமஸ் ஆல்வா கண்டுபிடித்த மின்சாரம் ஆண்டாண்டு காலமாய் இங்கு தான் இருந்தது, ஆல்பர் ஐன்ஸ்டின் சொன்ன, சக்தியில் இருந்து பொருளும் பொருளில் இருந்த சக்தியும் ஆண்டாண்டு காலமாய் இந்த பிரபஞ்சத்தின் இயல்பாய் நடந்து கொண்டிருந்து, டாலமி சொன்ன, வட்டப் பாதையில் கோள்கள் சுற்றி வருகின்றன என்பதும் நடந்து கொண்டுதானிருந்து, ஐசக் நியுட்டனின் புவி ஈர்ப்பு விசை கொள்கை அதில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருந்து, ஆனால் நமக்கு ஆச்சர்யமாக இருந்தது. இவற்றை எல்லாம் கண்டுபிடிக்க நமக்கு நூற்றண்டுகளை கடக்க வேண்டியிருந்து.

இன்றய எலக்ட்ரானிக்ஸ் யுகம் சொல்கிற எங்கோ நடப்பதை இங்கே பார்க்க முடியும் என்பதையும், உலகின் ஒரு மூலையில் பேசுவதை மறு மூலையில் கேட்க முடியும் என்பதையும் நம்ப நமக்கு இத்தனை நூற்றண்டுகளாயிற்று, இன்றய கண்டுபிடிப்புகளும் இனி வரும் கண்டுபிடிப்புகளும், இடமும் காலமும் என்று உண்டாயினவோ அன்றே உண்டாகிவிட்டது அதை உணர நம் அறிவு வளர இத்தனை காலங்களாயிற்று.

இவற்றையெல்லாம் படைத்து அதை உணர நமக்கு வேண்டிய அறிவையும் கொடுத்த அந்த பரம் பொருளை அது கொடுத்த சொற்ப அறிவை கொண்டு அறிய முற்படுவது விஞ்ஞானம். மெய்யறிந்து, மெய்யழிந்து, மெய்யில் மெய்யாகி உதிர்த்த மெய்யான வார்த்தைகளே மெய்ஞானம்;;.

விஞ்ஞானம் இன்று உபகரணங்களுடன் செய்து காட்டியதை, அன்றே உபகரணங்களின்றி செய்துகாட்டியது மெய்ஞானம், சிற்றறிவை அழித்து பேரரறிவில் ஐக்கியமாகி அறியப்பட்ட உண்மைகள் அவை.

இன்று சிற்றறிவைக் கொண்டு பேரரறிவை அளக்க முற்படுவது விஞ்ஞானம், இன்றும் விஞ்ஞானத்தால் விளங்க முடியா, விளக்க முடியா நிகழ்வுகள் பல உண்டு. விஞ்ஞானத்தை மெய்ஞானத்திற்கு எதிராக பயன்படுத்தாமல் மெய்ஞானத்துடன் விஞ்ஞானத்தையம் கலந்து அறிய முற்ப்பட்டால் வரும் காலங்களில் பல அறிய நிகழ்வுகள் நிகழலாம். அதுவரை மனிதன் தன் சொற்ப அறிவால் தன்னைத்தானே சூறையாடமல் இருக்க வேண்டும்.

இந்த நூற்றண்டின் மிக சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட ஐன்ஸ்டின் கூட, நான் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக்குள் தோன்றியது என்று கூறியிருக்கிறார். அந்த தோன்றலைக் கூறுவது தான் மெய்ஞானம்.




5 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை மிக அழகாக கூறியிருக்கிறீர்கள்..

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இஸ்மத்

Rajakamal சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
புல்லாங்குழல் சொன்னது…

உங்கள் சேவை தொய்வின்றி தொடர்ந்து பலருக்கு பலனளிக்க இறைவனை வேண்டுகின்றேன்.

தேவன் சொன்னது…

நல்ல இடுகை ஐயா வாழ்த்துக்கள்...