செவ்வாய், ஜூன் 15, 2010

நிலா




நிலா

அடி கள்ளி நிலவே
உன் திரு உருவை
திரைக்குள் மறைத்து
திரு முகம் மட்டும்
வெளிக்காட்டி
கையில் பூக் கணைகளுடன்
பூ உலகில்
பூ எறிய நீ
யாரைத் தேடுகிறாய்

உன் ஒளி முகத்தில்
விழிகளைத் தேடுகிறேன்;
உன் பால் முகத்தில்
பளிங்கு பற்களைத் தேடுகிறேன்
வேண்டாம்!
அதை மறைத்தே வைத்திரு

உன் முகம் பார்த்தே
முகவரி இழந்த நான்
உன் ஒளி விழியால்
மூர்ச்சையாகி விடுவேன்
உன் முகத்திற்கும்
முக்காடுட்டே வைத்திரு
அது தான் பாதுகாப்பு
உனக்கல்ல எனக்கு.

ராஜா கமால்