திங்கள், அக்டோபர் 26, 2009

ஏன் அம்மா


பிறந்த குழந்தை
எல்லாரும் குடிப்பது
தாய் பால்
எனக்கு மட்டும்
ஏனம்மா கள்ளிப் பால்
நான் பெண் என்பதாலா?
உன் அம்மா இப்படி
நினைத்திருந்தால்
நான் பிறந்திருக்க மாட்டேனே அம்மா.

ஞாயிறு, அக்டோபர் 25, 2009

இரு தலை ஓருடல்

இறைவன் படைப்பில் எதுவும் நிகழலாம், இந்தப் படங்களை கண்டதும் அதிர்ந்தேன். இது உண்மையா பொய்யா தெரியவில்லை, இந்தப் படங்களை உங்களுடனும் பகிர்ந்துக் கொள்ள எண்ணி இங்கே பதிந்திருக்கிறேன் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.





புதன், அக்டோபர் 21, 2009

வனத்தில் ஒரு கைவண்ணம்

கற்ச்சிலைகளைப் பார்த்திருப்போம், இதோ மரத்திலே வடிக்கப் பட்ட சிலைகள்














ஞாயிறு, அக்டோபர் 18, 2009

நாகரிக குகை மனிதன்

ஆதிகாலத்தில் குகைகளில் வாழ்ந்த மனிதன், நாகரிக வளர்ச்சிக்கு பின் கட்டிடங்களில் தன் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டான், ஆனால் மீண்டும் பழைய ஞாபகம் வித்தியாசமாக வாழ்விடங்களை அமைத்துள்ள மனிதன் ரசனை மற்றும் தொழிழ் நுட்பங்களைப் பாருங்கள்








புதன், அக்டோபர் 14, 2009

விந்துக்குள் விந்தை

இறைவனுடைய படைப்பில் எல்லாமே அதிஅற்புதமும் விந்தைகளும் நிறைந்தது, அதில் விந்து ஒரு விந்தையானது, இதைத்தான் இறைவன் கூறுகிறான் உன் பிறப்பை பற்றி நீ சிந்தித்தால் என்னைப் பற்றி அறிந்துக் கொள்வாய் என்று கூறுகிறான். இதில் ஆழமான அர்த்தம் உள்ளது.

மனிதன் செழுத்தும் ஒரு சொட்டு விந்தில் பல்லாயிரக் கணக்கான உயிரணுக்கள் பெண்ணின் யோனியில் விடப்படுகிறது அங்கிருந்து ஃபிலொப்pயன் டியுப் வழியாக கரு முட்டையை சென்றடைகிறது. இந்த ஃபிலொபியன் டியுபிற்கும் விந்தணு கரு முட்டையை சென்றடைதற்கும் உள்ள தூரம் ஒரு மனிதன் 5 மைல் நீளம் ஆற்றை நீந்திக் கடப்பதற்கு சமமானது. ஒரு கூட்டமாக செல்லும் விந்தணுக்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டது கருமுட்டையை துளைத்து சென்று அடைந்ததும் மற்ற விந்தணுக்கள் வாழ்த்துச் சொல்லி திரும்பி விடுகிறது.

எதிர் நீச்சலும், மற்றவரை முந்தி செல்ல வேண்டிய நிர்பந்தமும் மனித உயிரணுக்கு அப்பொழுதே தொடங்கி விடுகிறது. உள்ளே செல்லும் நுண் உயிரியான அது தான் 6 அடி உயரமுள்ள மனிதனாக பரிணமிக்கிறது. என்னே இறைவனின் வல்லமை.

விந்தணு ஃபிலோபியன் டியுப் வழியாக கரு முட்டை நோக்கி செல்லும் போது.
ஒரே சமயத்தில் இரண்டு விந்தணுக்கள் கரு முட்டையை துளைத்து உள்ளேரும் போது.
Genetical material உயிரணுவின் தலையில் Store செய்யப்பட்டிருக்கிறது.
8 நாட்கள் ஆன Embryo, Mucous membrane என்ற tissue ஆல் போர்த்தப் படுகிறது.
22 நாட்கள் ஆன embryo யில் முதலில் உருவாவது மனித மூளை
24 நாட்களில் இதயம் உண்டாகி துடிக்கத் தொடங்குகிறது.
9 வாரங்களில் V வடிவ இரத்தக் குழாய் கள் உண்டாகி எலும்புகளும் உண்டாகின்றன.
10 வாரங்களில் 3 செ.மி நீளம் வளர்கிறது.
20 வாரங்களில் குழந்தை 20 செ.மி நீளம் வளர்கிறது.
36 வாரங்களில் குழந்தை முழு உருவம் பெறுகிறது
இரட்டை குழந்தை இருக்கும் விதம்

திங்கள், அக்டோபர் 12, 2009

ஒரு கல்லிரலின் கடிதம்

அன்பு மனிதர்களே நான் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் உங்களுக்காக நான் செய்யும் பணிகள் என்ன என்ன என்பதை உங்கள் பார்வைக்குத் தருகிறேன் பார்த்துவிட்டு நீஙகளும் என் மீது அன்பு செலுத்தினால் நாம் இருவரும் நலமாக இருக்கலாம்.

1. உங்களுக்கு தேவையான இரும்பு சத்துகளை சேமித்து வைக்கிறேன் அது மட்டுமில்லாமல் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துகளையும் சேமித்து வைக்கிறேன்
நான் இல்லாமல் உங்களால் சக்தியாக இயங்க முடியாது

2. உங்கள் உணவு செரிப்பதற்கான திரவத்தை நானே சுரக்கிறேன்
நான் இல்லையேல் உங்கள் உணவு செரிமானமாகமல் உடலுக்கு தேவையான சத்துகளாக மாற்றப் படாது.

3. நச்சுத் தன்மை மிகுந்த இரசாயனங்கள் மது, போதைப் பொருட்கள் detoxify poisonous chemical போன்றவைகளை என்னுள் செலுத்துகிறீர்கள்.

நான் இல்லாவிட்டால் தவறான பழகங்கள் உங்களை கொன்று விடும்
4. தேவையான சக்தியை ஒரு battery cell போல் நான் சேமித்து வைத்துக் கொள்கிறேன் (carbo hydrates glucose and fat) உங்களுக்கு தேவையான அளவு இரத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்கிறேன்.

நான் இல்லையேல் இரத்தில் சர்கரையின் அளவு கூடி நிங்கள் coma நிலைக்கு சென்று விடுவீர்கள்

5. நிஙகள் கருவாயிருக்கும் காலந்தொட்டு உங்கள் இரத்ததை உற்பத்தி செய்பவன் நான் தான்.

நான் இல்லையேல் நீங்கள் இல்லை.

6. உங்கள் உடம்பு நலமாக வளர்வதற்கு நானே புதிய protein களை உற்பத்தி செய்கிறேன்.
நான் இல்லையேல் நீங்கள் ஆரோக்கிய வளர்ச்சி பெற முடியாது.

7. நீங்கள் சுவாசிக்கும் காற்று மற்றும் நச்சு புகை போன்றவற்றால் ஏற்படும் நச்சு தன்மை உங்களை பாதிக்காமல் நானே உங்களை பாதுகாக்கிறேன்.

நான் இல்லையேல் நச்சு தன்மையால் உங்கள் மற்ற உறுப்புகள் பாதிக்கப் படும்

8. உங்கள் உடம்புகளில் ஏற்படும் வெட்டு காயங்களிலிருந்து வரும் ரத்தத்தை உறைய வைத்து நானே முழுவதும் வெளியேறாமல் நிறுத்துகிறேன்.இல்லையேல் ரத்தம் முழுதும் வெளியேறி இறக்க நேரிடும்

9. உங்கள் உடம்பில் செல்லும் வைரஸ்களை தாக்கி அழிக்கிறேன் cold gems and flu gems போன்றவற்றை நானே கொள்கிறேன்

நான் இல்லையேல் பல தொற்று நோய்களுக்கு ஆளாகி படுக்கையில் கிடக்க வேண்டி வரும்.


நான் உங்கள் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் பார்த்தீர்களா என் மீது அன்பு செழுத்தவும் என்னை பாதுகாக்கவும் நான் சில வழிகளை சொல்கிறேன்.

1. நீங்கள் மது, போதை உட்கொள்வதால் நான் cirrhosis என்ற நோய்க்கு ஆளாகிறேன்

2. Arosel spray (like painting smell)என்னை பாதிக்கும் அதை சுவாசிக்க வேண்டி வந்தால் மாஸ்க் அணிந்துக் கொள்ளுங்கள் ஜன்னல்களை திறந்து வையுங்கள்

3. அளவுக்கு அதிகமாக கொழுப்புள்ள பொருட்களை உண்ணாதீர்கள், நான் அதை சரியான அளவு வைத்துக் கொள்ள முயற்ச்சிக்கிறேன்.

4. தொடர்சியாக உண்ணாதீர்கள் எனக்கு இடைவேளை கொடுங்கள் அதுவே நான் சிறப்பாக பணியாற்ற உதவும்

5. நான் எந்நிலையிலும் பாதிக்கப் பட்டுள்ளேன் என்று தெரிவிக்க மாட்டேன் தெரிவிக்க முடியாது.

6. நான் எந்நிலையிலும் புகார் கூறாதவன் என்னை என் சக்திக்கு மேல் நிர்பந்திக்காதீர்கள்

7. இறுதியாக ஒரு வேண்டுகோள் என்னை மருத்துவரிடம் சோதித்துக் கொள்ளுங்கள் இரத்தப் பரிசோதனையில் என்னை தெரிந்துக் கொள்ளலாம்.

8. நான் மென்மையாக இருந்தால் நல்ல நிலைமையில் இருக்கிறேன், கடினமாகவோ வீங்கியோ இருந்தால் நான் பாதிக்கப் பட்டுள்ளேன் என்று அர்த்தம்

9. மருத்துவர் ultra sound and ct scan மூலம் என்னை அறிந்து கொள்வார்

10. என் வாழ்கையும் உங்கள் வாழ்கையும் உங்கள் கையில் உள்ளது நான் எவ்வளவு பாதுகாக்கிறேன் என்று அறிந்திருப்பீர்கள் அது போல் என்னையும் பாதுகாக்க வேண்டுகிறேன்

இப்படிக்கு

YOUR SILENT PARTNER AND
EVER LOVING LIVER

ஞாயிறு, அக்டோபர் 11, 2009

தாலிபான்களால் விடுதலை செய்யப்பட்ட பெண் பத்திரியாளர்


தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் சமீபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த சகோதரி யுவான் ரிட்லி எழுதிய கட்டுரை இது. இனி அவரது சொந்த நடையில்...

"நான் தாலிபான்களால் சிறைப் பிடிக்கப்படும் வரை புர்கா அணிந்த பெண்களை மிகவும் ஒடுக்கப்பட்ட படைப்பினமாகவே கருதி வந்தேன்.



செப்டம்பர் 2001-ல் அமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று சற்றே 15 நாட்களுக்குப் பிறகு ஒரு நீல நிற புர்காவில் என்னை மறைத்துக் கொண்டு ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து உள்ளே புகுந்தேன். தாலிபான்களின் கொடுமையான ஆட்சியில் சராசரி மனித வாழ்க்கையைப் பற்றி நான் பணியாற்றிய பத்திரிகைக்கு செய்திகள் திரட்டுவது என் ரகசிய திட்டம். ஆனால் நான் கண்டுபிடிக்கப் பட்டு, கைது செய்யப்பட்டு, பத்து நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னைக் கைது செய்தவர்கள் முகத்தில் துப்பினேன், ஆக்ரோஷமாக எதிர்த்தேன். அதனால் அவர்கள் என்னை ஒரு 'கெட்டப் பெண்' என்று அழைத்தார்கள். ஆனால் நான் குர்ஆனைப் படிப்பதாகவும், இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளப் போவதாகவும் வாக்களித்த பிறகு என்னை விடுதலை செய்து விட்டார்கள். (உண்மையைச் சொல்லப் போனால் நான் விடுதலையானபோது யார் மகிழ்ந்தார்கள் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை - நானா? அல்லது அவர்களா?).

எனது சொந்த ஊரான லண்டன் திரும்பிய பிறகு நான் தாலிபான்களுக்கு அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக இஸ்லாத்தைப் பற்றி அறியத் துவங்கினேன். நான் படிக்கப் படிக்க இனம்புரியாத ஆச்சரியம் என்னை ஆட்கொள்ளத் துவங்கியது. குர்ஆனில் நான் மனைவிமார்களை எப்படி அடிப்பது என்றும், மகள்களை எப்படி அடக்கி ஒடுக்கி துன்புறுத்துவது என்றும் ஆண்களுக்கு உபதேசிக்கும் வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பெண்ணின விடுதலையை ஒங்கி ஒலிக்கும் திருக்குர்ஆனின் நல்லுபதேசங்களைக் கண்டு திகைத்துப் போனேன். எனது கைதுக்குப் பிறகு இரண்டரை வருடங்கள் கழித்து நான் இஸ்லாமை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டேன். எனது இந்த மாற்றம் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திகைப்பு, ஏமாற்றம், உற்சாகம் போன்ற உணர்வுகளின் கலவையான நிலைமையை உண்டு பண்ணியது. இன்று! மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி பிரிட்டனின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாக் ஸ்டிரா விமர்சனம் செய்திருப்பது என்னை ஏமாற்றமும், அச்சமும் கொள்ள வைக்கிறது. இவருக்கு பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேர், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மற்றும் இத்தாலியப் பிரதமர் ரெமானோ ப்ரோடி ஆகியோர் வேறு அதரவளிக்கின்றனர் என்பதுதான் வேடிக்கையான வேதனை.



புர்காவுக்கு வெளியேயும், உள்ளேயும் இரண்டு மாறுபட்ட வாழ்க்கை முறையை உணர்ந்த ஒரு பெண் என்ற அடிப்படையில் சொல்கிறேன்: இஸ்லாமிய உலகில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களின் அடக்குமுறையைப் பற்றி ஆரவாரமாக கவலைப்படுகிற கிட்டத்தட்ட அனைத்து மேற்கத்திய அரசியல்வாதிகளும் சரி, பத்திரிக்கையாளர்களும் சரி இஸ்லாத்தைப் பற்றியும், அது பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் பற்றியும் ஒன்றுமே தெரியாதவர்களாகத்தான் இருக்கின்றார்கள்.

ஹிஜாபைப் பற்றியும், பருவமடையாத மணப்பெண்கள் பற்றியும், பெண்கள் கத்னாவைப் பற்றியும், கௌரவக் கொலைகளைப் பற்றியும், கட்டாயத் திருமணங்கள் பற்றியும் இவர்கள் சகட்டுமேனிக்கு எழுதியும் பேசியும் வருகிறார்கள். இந்த வன்கொடுமைகள் அத்தனைக்கும் இவர்கள் இஸ்லாத்தைக் குற்றவாளி ஆக்குகின்றார்கள். இவர்களது இந்த வெறித்தனமானப் போக்கு இவர்களது அறியாமையைத்தான் பறைசாற்றுகின்றது.

மேற்கண்ட வெறுக்கத்தக்க விஷயங்கள் கலாச்சாரம் மற்றும் சமூக சடங்கு சம்பிரதாயங்களுக்கு உட்பட்டவை. இவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. திருக்குர்ஆனை கருத்தூன்றிப் படித்தால் ஒர் உண்மை விளங்கும். மேற்கத்திய பெண் விடுதலைப் போராளிகள் 1970-களில் போராடிப் பெற்ற அனைத்துப் பெண்ணிய உரிமைகளும் 1400 வருடங்களுக்கு முன்னரே முஸ்லிம் பெண்மணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இஸ்லாமியப் பெண்கள் ஆன்மிகத்திலும், கல்வியிலும், சொத்துரிமையிலும் ஆண்களுக்கு நிகரான உரிமைப் பெற்றுத் திகழ்கின்றனர். ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து அதனை சரிவர வளர்க்கும் பெண்மணி பெரும் பாக்கியம் நிறைந்தவளாகக் கருதப் படுகின்றாள்.

இவ்வாறு இஸ்லாம் பெண்ணினத்திற்குத் தேவையான எல்லாவற்றையும் வழங்கி மேன்மைப்படுத்தி இருக்கும்போது, இந்த மேற்கத்திய ஆண்கள் ஏன் முஸ்லிம் பெண்களின் ஆடை விஷயத்தில் மட்டும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்? பிரிட்டிஷ் அரசின் அமைச்சர்களான கோர்டன் பிரவுன் மற்றும் ஜான் ரீட் ஆகியோர் முஸ்லிம் பெண்களின் முகத்திரையைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் இருவருமே ஆண்கள் கூட பாவாடை அணியும் ஸ்காட்லாந்து நாட்டு எல்லையோரத்தைச் சேர்ந்தவர்கள்.



நான் இஸ்லாத்திற்கு மாறி முக்காடு அணியத் துவங்கியபோது மிகப்பெரிய அளவில் விளைவுகளை எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்ததெல்லாம் எனது தலையையும், தலைமுடியையும் மூடிக் கொண்டேன், அவ்வளவுதான். ஆனால் உடனே நான் இரண்டாந்தர குடிமகளாக்கப்பட்டேன். ஏதோ கொஞ்சம் இஸ்லாமிய எதிர்ப்புணர்வுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் இந்தளவிற்கு இனவெறியை நான் எதிர்பார்க்கவில்லை. 'வாடகைக்கு' என்ற வாசகத்தடன் என்னைக் கடந்து சென்று நின்ற டாக்ஸியிலிருந்து ஒரு வெள்ளைக்காரப் பெண் இறங்கினாள். நான் அந்த டாக்ஸியில் ஏறுவதற்காக எத்தனித்தேன். ஆனால் என்னைக் கூர்ந்து கவனித்த டிரைவர் என்னை நிராகரித்து விட்டு விருட்டென்று காரை ஒட்டிச் சென்று விட்டான். மற்றொரு டாக்ஸி டிரைவரோ என்னிடம் "பின் ஸீட்டில் வெடிகுண்டு எதையும் வைத்து விட்டுப் போய்விடாதே' என்றும் "பின்லேடன் எங்கே ஒளிந்து இருக்கிறான் தெரியுமா?' என்றும் கமெண்ட் அடித்தான்.

ஆம்! பெண்கள் கண்ணியமாக உடை உடுத்த வேண்டும் என்பது ஒர் இஸ்லாமியக் கடமை. நான் அறிந்தவரை பெரும்பான்மையான முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் - அதாவது முகம் மட்டும் வெளியில் தெரியும் வண்ணம் உடை அணிகின்றனர். வெகு சிலரே முகத்தையும் மறைக்கும் நிகாப் எனும் முகத்திரை அணிந்து வெளியில் வருகின்றனர். என்னைப் பொறுத்தவரை, ஒரு முஸ்லிம் பெண் கண்ணியத்திற்காக ஹிஜாப் அணிகிறாள், அவளுக்கு அந்த கண்ணியத்தைக் கொடுத்து விட்டுப் போங்களேன்! வால் ஸ்டிரீட்டில் இயங்குகின்ற ஒரு வங்கியின் அதிகாரி தன்னை ஒரு சீரியஸான பிஸினஸ்மேனாக பிறர் கருத வேண்டும் என்பதற்காகத்தானே கோட் சூட் அணிகிறார்! - அதுபோலத்தான் இதுவும்.

நான் ஒரு நேரத்தில் மேற்கத்திய பெண்ணிய வாதியாகத்தான் இருந்தேன். ஆனால் பிறகுதான் உணர்ந்தேன். முஸ்லிம் பெண்ணியவாதிகள் பிறரைவிட மிகத் தீவிரமாக பெண் விடுதலைக்காக போராடக் கூடியவர்கள் என்று! அநாகரீகமான அழகிப் போட்டிகளை நாம் வெறுக்கின்றோம். ஆனால் நமக்கு எரிச்சலூட்டும் விதமாக 2003-ல் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிய பெண் ஒருத்தி நீச்சல் உடையில் பங்கேற்ற நிகழ்ச்சியை அந்தப் போட்டியின் நடுவர்கள் இஸ்லாமியப் பெண்களின் விடுதலைக்கான ஆரம்பம் இது என்று வர்ணித்தனர்.

ஹிஜாப் அணிவது சமூக உறவைப் பேணுவதற்கு மிகவும் தடையாக இருக்கிறது என்று இத்தாலியப் பிரதமர் ப்ரோடி கூறியிருக்கிறார். இந்த முட்டாள்தனமான வாதத்தைக் கேட்கும்போது எனக்கு அழுவதா அல்லது சிரிப்பதா? என்று தெரியவில்லை. இவர் சொல்வது சரியென்றால் இன்றைய விஞ்ஞான யுகத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செல்போன், சாதா போன், பேக்ஸ், எஸ்.எம். எஸ். தகவல்கள் மற்றும் ரேடியோ ஆகியவை அர்த்தமற்றவையாகி விடும். இந்த உபகரணங்களை தொடர்பில் இருப்பவர்களின் முகத்தைப் பார்த்துக் கொண்டா நாம் உபயோகிக்கிறோம்?

இஸ்லாத்தின் கீழ் நான் மதிக்கப்படுகின்றேன். எனக்குத் திருமணம் ஆகியிருந்தாலும், ஆகாவிட்டாலும் எனக்கு கல்வி கற்க உரிமை உண்டு என்றும், கல்வியைத் தேடிப்பெற வேண்டியது எனது கடமை என்றும் இஸ்லாம் எனக்கு சொல்லித் தருகின்றது. இஸ்லாத்தின் இந்த கட்டமைப்பிலும் பெண்களாகிய நாங்கள் ஆண்களுக்கு சமைப்பது, துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற சேவகங்கள் செய்துதர வேண்டும் என்று கட்டளையிடப்படவே இல்லை.

இன்னும் சொல்லப் போனால், பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் ஒரு குறிப்பிட்ட மதத்தையோ, இனத்தையோ அல்லது தேசத்தையோ சார்ந்தது அல்ல. இது மதம், மொழி, இனம், கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் கடந்து பெண்ணினத்தை பாதித்து வரும் ஒர் உலகளாவிய பிரச்சினையாகும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால்... National Domestic Violence Survey நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் 12 மாத கால அளவில் 4 மில்லியன் பெண்கள் ஆண்களது கொடுமைக்குள்ளாகி வருகின்றனர். மேலும் ஒரு நாளில் மட்டும் 3 பெண்கள் தங்களது காதலன் அல்லது கணவனால் கொல்லப்பட்டு வருகின்றனர்.

ஆண்கள் தங்கள் மனைவிமார்களை கைநீட்டி அடிக்க அனுமதிக்கிறது இஸ்லாம் என்ற கூற்றை எடுத்துக் கொண்டால் - இது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி குர்ஆன் வசனங்களையும், நபிமொழி குறிப்புகளையும் மேற்கோள் காட்டுகின்றனர். ஆனால் அந்த வசனங்கள் மற்றும் நபிமொழிகளின் உள்ளர்த்தங்களை தவறாக விளங்கிக் கொள்வதால் எற்படும் விளைவுதான் இது. ஒர் ஆண் தனது மனைவியை அடிக்கத்தான் வேண்டுமாயின், அவளது உடலில் எவ்விதக் காயமோ அடையாளமோ இல்லாமல்தான் அடிக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது. இது குர்ஆனுக்கே உரிய தனித்துவமிக்க சொல்லாளுமையாகும். இதன் உள்ளர்த்தத்தை நெருக்கமாகச் சொல்லப் போனால்... முட்டாளே! உனது மனைவியை அடிக்காதே!! என்பதுதான்.

இதற்கு மேலும் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தி வைக்கிறது என்று வாதிடுவோர்களின் கவனத்திற்கு ஒன்றைச் சொல்கிறேன்: அமெரிக்காவின் ஆன்மீகக் குரு ரெவரண்ட் பேட் ராபெர்ட்ஸன் 1992-ல் கூறிய கருத்து இதோ: "பெண் விடுதலை என்பது சமூக சீர்கேட்டை உருவாக்கி, குடும்ப பாரம்பரியத்தை சீர்குலைத்து, கணவர்களை விட்டு ஒடுகின்ற, தங்கள் குழந்தைகளைக் கொல்கின்ற, ஒரினச் சேர்க்கையில் பெண்களை ஈடுபடுத்துகின்ற ஓர் இயக்கமாகும்''. இப்போது சொல்லுங்கள்! யார் நாகரீகமானவர்கள்? யார் நாகரீகமற்றவர்கள்? என்று.''

(சகோதரி யுவான் ரிட்லி லண்டனில் இயங்கும் இஸ்லாம் சேனல் தொலைக் காட்சியின் அரசியல் எடிட்டர் மற்றும் 'In the Hands of Taliban: Her Extra ordinary Story' என்ற நூலின் இணையாசிரியர் ஆவார். இந்த நூலாசிரியரை hermosh at aol dot com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம். மேலும், 2001-ம் வருடம் இவர் தாலிபான்களிடம் சிக்கி இஸ்லாத்தின் மீது ஆர்வம் கொள்ள வைத்த சுவையான சம்பவம் குறித்து இவரது நேரடி பேட்டி அப்போது 'நியூஸ் வீக்' பத்திரிக்கையில் பரபரப்பாக வெளியாகி இருந்தது)