புதன், செப்டம்பர் 29, 2010

விண்ணுலகப் பயணம்


விண்ணுலகப் பயணம்
அகில உலகின் அருட்கொடை எம் பெருமான் முகம்மது(ஸல்) அவர்கள் தமக்கு நபித்துவம் கிடைத்தபின் மார்க்க அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார்கள், ஏக இறைக் கொள்கையை அன்றய மக்கத்துக் காஃபிர் ஏற்க மறுத்துக் கொண்டிருந்தார்கள். பல இன்னல்களுக்கிடையே தளராமல் ஏகத்துவக் கொள்கையை ரஸீல் (ஸல்) அவர்கள் பரப்பி வந்தார்கள். அப்பொழுது தான் இறைவனிடமிருந்து விண்ணுலக அழைப்பு வந்தது. இறைவன் திருமறையில் பனி இஸ்ராயில் அத்தியாயத்தில் 17:1 ஆயத்தில் பெருமானாரின் விண்ணுலகப் பயணத்தைப் பற்றிக் கூறுகிறான்.
‘(அல்லாஹ்)மிகப் பரிசுத்தமானவன், (முகம்மது(ஸல்)) தன் அடியாரை (சிறப்புற்ற பள்ளியிலிருந்து(கஃபா) மஸ்ஜில் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்(அவ்வாறு அழைத்துக் சென்று) நாம் அதனை சூழ உள்ள பூமிகளை ஆசிர்வதித்துள்ளோம், நம்முடைய திருஷ்டாந்தாங்களைகளை அவருக்கு காண்பிப்பதற்க்காகவே (அழைத்துக் சென்றோம்) நிச்சயமாக (உமதிறைவனாகிய) அவனே செவியுறுவோனும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான்.
சர்வ வல்லமைப் படைத்த ரஹ்மான் நபி(ஸல்) அவர்களின் விண்ணுலக பயணம் பற்றிய நிகழ்வை இந்த ஆயத்தில் கூறுகிறான், நபி (ஸல்) அவர்களை மக்காவிலிருந்து 40 இரவுகள் ஒட்டகையை ஓட்டினால் கடக்கும் தூரத்திற்கு அழைத்துக் சென்று, அங்கிருந்து விண்பயணத்திற்கு அழைத்துக் சென்றிருக்கிறான், ரஸீல் (ஸல்) வாழ்ந்துக் கொண்டிருப்பது மக்கா, மார்கப் பிரச்சாரம் செய்துக் கொண்டிருப்பது மக்கா, அல்லாஹ் நினைத்திருந்தால் கஃபத்துல்லாவிலிருந்தோ, நபி (ஸல்) அவர்களின் வீட்டு வாசலிருந்தே விண்ணுலப் பயணம் அழைத்துக் சென்றிருக்க முடியும் அப்படியிருந்தும் ஏன் அவர்களை மக்காவிலிருந்து அவ்வளவு தூரம் அழைத்துச் சென்று விண்ணுலப் பயணம் நடந்து?
இதை நாம் கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் ஒரு விசயத்தை உலக மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டி, என்ற உண்மை தெரிய வரும் நபி (ஸல்) அவர்களை ஜிப்ரயில் மூலம் ஏழு வானங்களையும் தாண்டி அழைத்துக் செல்கிறார்கள் இறைவனை சந்திப்பதற்கு, ஒவ்வொரு வானத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளை நபி (ஸல்) அவர்கள் தெளிவாக ஹதிஸில் விளக்குகிறார்கள், அந்த நிகழ்வுகளையும் பெருமானாரின் விண்ணுலகப் பயணத்தையும் ஏற்க மறுக்கின்றனர்.
இது இயல்பு வானத்தில் நான் அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்று சொன்னால் வானத்தை இதற்கு முன் யார் பார்த்திருகிறார்கள், அல்லாஹ்வும் அவனுடைய மலக்குகளும் நபி(ஸல்) அவர்களைத் தவிர யாரும் பார்த்தில்லை. அப்படியிருக்க அங்கு கண்டதை எப்படி நம்புவார்கள், இதை அறிந்து தான் அல்லாஹ் நபியவர்களை மக்காவிலிருந்து தொலை தூரம் இருக்கும் மஸ்ஜில் அக்ஸாவிலிருந்து அழைத்துக் சென்றான்.
அன்றய மக்கத்துக் காஃபிர்கள் வியாபார நிமித்தம் ஜெருசேலம் சென்றிருக்கின்றனர், நபியவர்கள் சில வினாடிகளில் அங்கு செல்வது சாத்திமே இல்லை,நபியவர்கள் தன் வாழ்நாளில் அங்கு சென்றவர்களுமல்ல. இது உண்மையா என்று அறிந்தக் கொள்ள அவர்கள் நபியவர்களிடம் அங்குள்ள சில அடையாளங்களைக் கேட்டனர் நபியவர்களும் சரியாகச் சொன்னார்கள், சில வினாடிகளில் இவர் இவ்வளவு தூரத்தை கடந்திருப்பாரானால் விண்ணுலகப் பயணும் சாத்தியமே என்பதை நிருபிக்க பிற்காலத்தில் ஒரு சாட்சி வேண்மென்தினால் தான் இறைவன் நபியவர்களை மஸ்ஜிதில் அக்ஸாவிலிருந்து விண்ணுலகப் பயணம் அழைத்துச் சென்றான்.
அல்லாஹ்வே மிக்க அறிந்தவனும் நுண்ணறிவாளனுமாக இருக்கிறான், மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.

திங்கள், செப்டம்பர் 27, 2010

நீலத் திமிங்கிலம் (BLUE WHALE)

நீலத் திமிங்கிலம் (BLUE WHALE)

இந்த பூமி கிரகத்தில் படைப்பினங்களிலேயே மிகப் பெரியது இந்த நீலத்திமிங்கிலம் டைனோசர்கள் என்படும் மிருகங்களைவிட இரண்டு மடங்கு பெரியது இந்த நீலத் திமிஙகிலங்கள்.

இதன் எளை 200 டன்கள், இது 25 ஆசிய யானைகளை விட கூடுதல் எடையாகும், இது 100 அடி நீளம், நீளவாக்கில் வளரக்கூடியது. இது இரண்டு பஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைத்தால் வரும் நீளம் வரும். பாஸ்கட் பால் (BASKET BALL COURT) கோர்ட்டை விட நீளமானது.

இது ஒரு நாளைக்கு உட்கொள்ளும் உணவு 4 டன்கள் ஆகும் 64000 பர்கர்களுக்கு (BURGAR) சமம். இதன் இதயம் 450கிகி ஒரு மனிதன் அதன் இதய நரம்புகளுக்குள் ஊர்ந்து செல்ல முடியும்.

இது படைப்பினங்களிலேயே அதிக சத்தம் உண்டாக்கும் விலங்கு ஆகும், இதன் சத்தம் ஜெட் விமான இஞ்சின் சத்தத்தை விட அதிகமாக இருக்கும் (ஜெட் விமான இஞ்சின் சத்தம் 140 டெசிபல்) நீலத்திமிங்கிலம் எழுப்பும் சத்தம் 188 டெசிபல் ஆகும் இது தன் சக திமிங்கிலத்துடன் 1600 கிமீ தூரத்துடன் இருந்தாலும் தொடர்புக் கொள்ள முடியும்.
20 நிமிடங்களுக்கு ஒரு முறை தாவிக் குதிக்கிறது 100 மீட்டர் ஆழம் வரை சென்று வருகிறது, ஏறத்தாழ தன் வாழ்நாள் முழுவதும் கடலின் அடிமட்டத்திலேயே கழிக்கிறது.

கப்பல்கள் கடலில் மணிக்கு 10-15 கிமீ வேகத்தில் செல்கிறது, நீலத்திமிங்கிலங்கள் மணிக்கு 32 கிமீ வேகத்தில் செல்கிறது, ஆபத்து நேரங்களில் ஒரு நாளைக்கு 160 கிமீ துராத்திற்கு பயணம் செய்கிறது.

அது மேல் துளையின் மூலம் பிய்ச்சி அடிக்கும் தண்ணிர் இரண்டு மாடி கட்டிடம் உயரம் செல்லும்.

ஒரு வருட கர்பத்திற்கு பிறகு இது குட்டி ஈனுக்கிறது, அதன் எடை பிறந்த உடன் 2700 கிகி அது 8 மீட்டர் நீளம் இருக்கும், இது ஒரு நாளைக்கு 190 லிட்டர் பால் அருந்தும், 1 மணிக்கு 4.5 கிகி இதன் எடைக் கூடுகிறது, ஒரு நாளைக்கு கூடும் எடை 90 கிகி ஆகும்.

7 – 9 மாதங்களில் இது 15 மீட்டர் நீளத்திற்கு வளர்கிறது, சில நிபுணர்களின் கருத்து கணிப்பு 1 வருடத்தில் 50 சதவீதம் வளர்ச்சி அடைந்து விடுகிறது. இது பாலுறவுக்கு தயாராகும் வயது 5 – 10 ஆகும் இதன் கர்ப காலம் 1 வருடம் ஆகும். ஒரு ஆப்பிரிக்க யானையின் கர்ப காலம் 18 – 22 மாதங்களாகும்.
விலங்கினங்களிலேயே கர்பத்தில் அதிக வேகமாக வளரக்கூடியது இந்த நீலத்திமிங்கிலமாகும் 3 மாதங்களுக்கு பிறகு ஒரு நாளைக்கு 2.5 செ.மி நீளம் வளர்கிறது 7 மாதங்களில் தோரயமாக 3.5 மீட்டர் நீளம் வளர்ந்து விடுகிறது.

இது அட்லாண்டிக் கடலில் சுமார் 2000 மீன்கள் உண்டாகும் என்று கணக்கிடப்படுகிறது. இதை 1960 ஆண்டு Internation whaling commission இதை வேட்டையாடுவதை தடை செய்துள்ளது.

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

சாந்தி அளிக்கும் ஸலவாத்


பிஸ்மில்லாஹ்

அகிலங்களின் அருட் கொடையான எம்பெருமான் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் அகிலங்களுக்கெல்லாம் ஓர் அருட்கொடை என்று (ரஹ்மத்துல் ஆலமீன்) அகிலங்களின் இறைவன் (ரப்புல் ஆலமீன்) தன் திருமறையில் கூறுகிறான், பெருமானரை அல்லாஹ் இவ்வுலகிற்கு அனுப்பியதன் முக்கிய நோக்கம் மனிதனை மனிதனாக வாழச் செய்வதற்கே. மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் சாந்தி அவசியம்.

அல்லஹ் அவர்களுக்க அளித்த மார்கம் சலாம் என்ற சாந்தியை உள்ளடக்கியதான இஸ்லாம் என்ற அற்புத மார்கத்தை உலகிற்கு அளித்து மனித, ஜின் இனங்கள் சாந்தியாக வாழ வழி செய்தான். இந்த சாந்தியாகப்பட்டது அனைத்து ஜிவராசிகளாலும் தேடப்படுவது, இவ்வுலகில் மட்டும் அல்ல மறுஉலகிலும் மனிதனுக்கு சாந்தியாக வாழ வழி செய்யப்பட்ட மார்கம் தான் இஸ்லாம்.

இந்த மானிட,மற்றும் ஜின் இனங்களின் மீது அல்லாஹ் கொண்ட பெருங்கருணை காரணமாக ரஸீல் (ஸல்) அவர்களையும் அவர்கள் மூலம் சாந்தி மார்கத்தையும் நமக்கு அளித்ததன் நோக்கம் சாந்தி. எங்கும் எப்போதும் சாந்தி நிலவ வேண்டும் என்பதே அல்லாஹ் நோக்கம், மனித, ஜின் இனங்கள் இறை மார்கத்தை சரிவர கடைப் பிடித்தால் சாந்தி நிலவுவது திண்ணம்.

ஆனால் மார்கத்தை சரிவர கடைப்பிடிப்போர் நம்மில் குறைவு, என்றாலும் சாந்தி நிலவ வேண்டும் அதற்காகத்தான் மிக கிருபையாளனான அல்லாஹ் திருமறையில் நமக்கு ஒரு கட்டளையை இறக்குகிறான்; 33:56 ‘ நானும் மலக்குகளும் நபிபெருமான் மீது ஸலவாத் சொல்கிறோம் மூமின்களே நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள்’ என்று சொல்கிறான்.

ஸலவாத்தாவது ‘ஸல்லல்லாஹீ அலைகி வஸல்லம்’ இதன் அர்த்தம் நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்பதாகும் இது நம் அனைவரும் அறிந்ததே, ஆனால் இதை ஏன் அல்லாஹ்வும் மலக்குகளும் சொல்வதுடன் நம்மையும் சொல்லச் சொலகிறான் என்ற உள் அர்த்தத்தை நோக்கும் போது, ஹதிஸே குத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் ‘அன மின் நூரல்லாஹ் குல்லு மின்னுரி’ நான் இறையொளியிலிருந்தும் மற்றப் படைப்பினங்கள் எல்லாம் என் ஒளிpயிலிருந்து படைக்கப்பட்டன’ என்றும் ஆக ரஸீல் (ஸல்) அவர்கள் மீது கூறும் ஸலவாத் இந்த பிரபஞ்சம் முழுவதின் மீதும் சாந்தி உண்டாவதாக என்ற அர்த்தத்தை தாங்கி நிற்கிறது.

அகிலங்களின் அருட்கொடையான மானிடத்தின் மீது பேரன்பு கொண்ட ரஸீல் (ஸல்) அவர்களும் ‘என் மீது யார் ஒருவர் ஒரு ஸலவாத் சொல்கிறரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலாவாத் சொல்வதாக’ சொல்கிறார்கள். நாமும், மலக்குகளும் நபி பெருமான் மீது ஸலவாத் சொல்ல சொல்ல அனைத்து ஜவராசிகளின் சாந்திக்காக துஆ செய்கிறோம். அல்லாஹ் ஸலவாத் சொல்வது இந்த பிரபஞ்சம் முழுவதும் சாந்தியுடன் இருக்க ஆசிர்வதிப்பதாகும்.

வேளிபடையாக நபிபெருமான் மீது ஸலாவாத் சொல்வது அல்லாஹ் அவர்கள் தரஜாவை மேன் மேன் உயர்த்த வேண்டி துஆ செய்வது. அந்தரங்கம்மான அர்த்தம் அனைத்து படைப்புகளுகும் சாந்தி வேண்டி துஆ செய்வது.
சாந்தி என்பது அல்லாஹின் மிகப் பெரும் அருட்கொடை அதை அல்லாஹ்வை அன்றி யாரும் கொடுக்க முடியாது. அதை நமக்கு அளிக்கவே நபி பெருமான் மீது ஸலவாத் சொல்ல சொல்கிறான்.

அல்லாஹ் நம் மீதும் இப்பிரபஞ்சத்தின் மீது பேரருள் புரிவானகவும், நபி (ஸல்) அவர்கள் மீது பாலை மணல்களின் எண்ணிக்கை அளவிலும் இறைவன் படைத்த ஜிவராசிகளின் எண்ணிக்கை அளவிலும் ஸலவாத் சொல்வோமாக ஸல்லல்லாஹீ அலா முகம்மது ஸல்லல்லாஹீ அலைகி வஸல்லம்.

சனி, செப்டம்பர் 25, 2010

நம்மைப் பற்றி நாம்



நாம் இந்த உலகில் எத்தனையோ விசயங்களை அறிறோம், பல படைப்புகளை கண்டு பிரமிக்கிறோம், நாமே ஒரு மிகப் பெரிய அதிசயம் என்பதை நம்மை நாம் நோக்கினால் அறியப் பெறுவோம்.

1. மனிதனால் மட்டுமே நேரான கோடு வரைய முடியும்

2. ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 450 மைல் நீளம் முடி வளர்கிறான்

3. மனிதன் சிரிக்கும் போது 17 தசைகள் இயங்குகின்றன.

4. மனித டி.என்.ஏ (D.N.A)யில் 800000 ஜீன்கள் இருக்கின்றன.

5. 4.2 அடிக்கும் குறைவாக உள்ள ஆண்களும், 3.9 அடிக்கும் குறைவாக உள்ள பெண்களும் குள்ளர்களாக கருதப்படுகிறார்கள்

6. மனித ரத்ததில் உள்ள வெள்ளை அணுக்கள் 2 முதல் 4 நாட்கள் வரை வாழ்கின்றன. சிவப்பு அணுக்கள் 3 முதல் 4 மாதம் வரை வாழ்கின்றன.

7. ஒவ்வொரு மனிதனும் 25 மில்லியன் தடைவ தன் வாழ்நாளில் விரல்களை மூடித்திறக்கிறான்.

8. maனித இதயம் அவன் கை முட்டி அளவு இருக்கும் சராசரி மனித இதயத்தின் எடை 0.5 எல்.பி.எஸ் (lbs)

9. மனிpத உடலில் நான்கு வகை மினரல்கள் உள்ளது 1. apatite, 2. oragonite, calcite and 3.chiristoba

10. மனித மூளை, உலகில் உள்ள எல்லா கைபேசிக்கும் ஆகும் மின்சாரத்தை ஒரு நாளில் உற்புத்தி செய்யும்.

11. மனித மூளையில் ஒரு நாளைக்கு ஒரு வினாடிக்கு 100000 வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன.

12. பிறக்கும் குழந்தைகள் (kneecap) எனும் கால் மூட்டு எலும்பு இல்லாமல் பிறக்சகின்றன, அது 2 முதல் 6 வயதில் வளர்ந்து விடுகிறது.

13. மனித நுரையிரல் விரிக்கப் பட்டால் ஒரு டென்னீஸ் கோர்ட் அளவு இருக்கும்.

14. பிறக்கும் குழந்தையின் மூளையில் 14 பில்லியன் செல்கள் இருக்கும், அது அந்த
மனிதன் இறக்கும் வரை கூடுவதே இல்லை, ஆனால் 25 வயதிற்கு பிறகு ஒரு நாளைக்கு 100000 செல்கள் வீதம் குறைக்கிறது, ஒரு நிமிடத்தில் ஒரு பக்கத்தை படிக்கும் போது 70 செல்கள் இறக்கின்றன. 40 வயதுக்கு பின் மூளையில் உள்ள நியுரான்கள் குறைய தொடங்குகின்றன, 50 வயதுக்கு மேல் நியுரான்கள் குறைப்பாட்டால் மூளையின் அளவு சுருங்குகிறது.

15. manitha (man) உடம்பில் உள்ள மொத்த பாக்டீரியாக்களின் எடை 4.4 lbs

16. saராசரி மனிதனுக்கு 2 மில்லியன் வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.

17. 1 லிட்டர் வியர்வையில் 540 கலோரி இழப்பீடு ஏற்படுகிறது. பெண்ணை விட ஆணுக்கு 40 சதவீதம் அதிகம் வியர்வை சுரக்கிறது.

18. வலதுப்பக்க நுரையிரல் இடதுப்பக்க நுரையிரலை விட அதிக காற்று நிறைக்கிறது.

19. ஒரு மனிதன் ஒரு நாளைக்க சராசரி 23000 தடவை மூச்சு விடுகிறான்

20. நமது வாயில் 40000 பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

21. நாம் கண்ணை திறந்து கொண்டு ஒரு போதும் தும்ம முடியாது.

22. மனித உடலில் முதுகந்தண்டில் 33 முதல் 34 எலும்புகள் இருக்கின்றன.

23. ஆணைவிட பெண் இரு மடங்கு கண் சிமிட்டுகிறாள்.

24. மனித உடலில் மிகச்சிறிய செல் விந்துவில் உள்ளது.

25. குழந்தைகள் பிறக்கும் போது ஏறத்தாழ 300 எலும்புகளுடன் பிறக்கிறது. மனித உடலில் உள்ள சராசரி எலும்புகளின் எண்ணிக்கை 206.

26. நம் உடலில் 7 சோப்பு கட்டிகள் தயாரிக்கும் அளவு கொழுப்பு இருக்கிறது.

27. உணர்வுகளை மனித உடம்பிலில் நரம்புகள் வினடிக்கு 90 மீட்டல் வேகத்தில் மூளைக்கு கொண்டு செல்கிறது.

28. 37,843,200 தடவை இதயம் ஒரு வருடத்திற்கு துடிக்கிறது.

29. ஊதா நிறக்கண்களை உடையவர்கள் துல்லியமாக வலியை உணர்கிறார்கள்

30. கை நகம் கால் நகத்தைவிட 4 மடங்கு வேகமாக வளர்கிறது.

31. மனித உடலில் வாழ்நாளில் 1000 தடவை தோல் மாறி விடுகிறது.

32. மனித உடலில் உள்ள நரம்புகளின் நீளம் 46 மைல்கள்.

புதன், செப்டம்பர் 22, 2010

வாழ்க்கை எனும் பெருங்கனவு


வாழ்க்கை எனும் பெருங்கனவு

உலகில் உயிரினங்கள அனைத்திலும் தனி சிறப்பு பெற்றது மனித இனம், இந்த பூமி உருண்டையை உல்லாசபுரி ஆக்கியதும் இந்த மனித இனம் தான், இரத்த வெள்ளமாக்குவதும் இந்த மனித இனம் தான், இந்த பூமி உல்லாசபுரி ஆவதற்கும், இரத்த வெள்ளம் பாய்வதற்கும் காரணம் ‘நான்’ என்ற அகங்காரம் தான்.

பூமியில் மனிதனைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் ‘தான்’ என்ற அகங்காரத்துடன் வாழ்வதில்லை, இது உண்மை. மயில் மற்றப் பறவைகளைப் பார்த்து எனக்கு தோகை இருக்கிறது உனக்கிருக்கிறதா என்பது போல் நடந்துக் கொள்வதில்லை, இதே போல் எந்த மிருகமும் நான் வெள்ளை, நீ கருப்பு, நான் உயரம், நீ குள்ளம், நான் அழகு, நீ அவலட்சணம் என்று மமதையுடன் நடந்துக் கொள்வதில்லை. இதற்கு இந்த மிருகங்கள் காரணம் அல்ல, அவை படைக்கப் பட்ட விதமே அப்படித்தான். மிருகங்கள் உணவுக்காக ஒன்று மற்றொன்றைக் கொள்ளும் அல்லது தான் தாக்கப் பட்டால் தற்காப்புக்கு மற்றதைக் கொள்ளும், இது மட்டுமே அதன் டி.என்.ஏ (D.N.A) யில் பதியப்பட்டிருக்கும்.

மனிதனைப் பொறுத்தவரை உடல் உறுப்புகளின் இயக்கம், முடி வளர்ச்சி, உடல் இயக்கம், போன்ற தகவல்கள் செயலியாக(Programe) எழுதப்பட்டு டி.என்.ஏ (D.N.A)யில் பொதியப் பட்டுள்ளது அது தலைமுறை, தலைமுறையாக பிரதி எடுக்கபட்டு மனித இனம் சீராக செயல்பட்டுக் கொண்டுகிறது. ஆனால் பிறக்கும் போது மனித மூளை மட்டும் எந்த நிகழ்வுகளும் பதியப் படாமல் இருக்கிறது, இன்றய ‘நாம்’ நம் மூளையில் பதியப்பட்ட நிகழ்வுகளே, வெறும் நினைவுகள் தாம் ‘நாம்’.

நாம் குழந்தையாய் இருக்கும் வரை நம் டி.என்.ஏ(D.N.A) யில் பதியப்பட்டுள்ளபடி இயக்கங்கள் இயல்பாய் நடக்கும் மலம், சிறுநீர் போன்றவை இயல்பாய் எந்த முன்னேற்பாடும் இன்றி நடக்கும் இதற்கு காரணம் ‘தான்’ என்ற அகங்காரம் இன்னும் மூளையில் பதியப்படவில்லை. ஆக ‘நான்’ என்பதே வளர வளர நாம் பாhக்கும் கேட்கும் விசயங்களின் தொகுப்புதான், மூளை என்ற வன் தகட்டில் (Hard Disk) உள்ள எல்லா நிகழ்வு பதிவுகளையும் பார்மேட்(formate) செய்து அழித்து விட்டோமானால் நாமும் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள அனைத்துப் படைப்புகளும் இயங்குவது போல் இயங்குவோம் பசி வரும்போது உண்போம், உறக்கம் வரும்போது உறங்குவோம். நான் செய்தேன், என் வீடு, என் நாடு, என் படை, என் இனம் போன்ற உணர்வுகளே தோன்றாது, பெரியவன், சின்னவன், ஜாதி, மதம் எதுவும் இருக்காது.

இதில் ஒரு ரகசியம் என்னவென்றால் இந்த அகங்காரம் நமக்கு படைக்கப் படவில்லை என்றால் உலகம் இத்தனை நாகரிக வளர்ச்சியும் விஞ்ஞான வளர்ச்சியும் பெற்றிருக்காது, நாமும் மற்ற உயிரினங்கள் போல் உண்டு,உறங்கி,புணர்ந்து,எப்போது பிறந்தோம் எப்போது மரித்தோம் என்ற விவரங்கள்; ஏதும் அறியாமல் மரித்திருப்போம் உலகம் தோன்றியவிதமே இருந்திருக்கும்.

‘நான்’ என்பதே மூளையில் பதியப்பட்ட மாய நினவுகள் தான், எது நீ? கையா? காலா? தலையா? உடம்பா? என்னுடைய கை, என்னுடைய கால், என்னுடைய தலை என்று தானே சொல்கிறோம் இதில் ‘என்’ என்பது என்ன? நம் மூளையில் பதியப்பட்ட வெறும் நினைவு தான். நமக்கு என்று தனிபட்ட சக்தி எதுவும் இல்லை, மரங்கள் வளர எந்த சக்தி உதவுகிறதோ, மலைகள் வளர எந்த சக்தி உதவுகிறதோ, அலைகள் வீச எந்த சக்தி உதவுகிறதோ அதே சக்தி தான் இந்த உடல் வளரவும் உதவுகிறது. நமக்கு சுய சக்தி எதுவும் இருந்தால் நாம் அசைவற்ற நிலைக்கு (மரணம்) போகவே மாட்டோமே நம் சுய சக்தியை பயன் படுத்தி இயங்கிக் கொண்டே அல்லவா இருப்போம்.

இந்த ‘தான்’ என்ற எண்ணம் மனிதனுக்கு மட்டுமே வைக்கப்பட்டு மற்ற ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல மலை, கடல், கிரகம் எதற்குமே வைக்கப்படவில்லை அதனால் தான் மற்ற எல்லாவற்றையும் மனிதன் தன் கட்டுக்குள் கொண்டுவர முடிகிறது. ஒரு மலைக்கு அந்த உணர்வு இருக்குமானால் மனிதன் அதன் மீது ஏறும்போது உதறிவிடும் யார் நீ என் அனுமதி இல்லாமல் என் மேல் ஏறுகிறாய் என்று கேட்கும். இதைத் தான் குர்ஆன் கூறுகிறது ‘அனைத்தையும் மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்’ என்று.

மனம் என்ற மாய உறுப்பில் தோன்றும் எண்ணங்கள், மூளை என்ற உறுப்பில் பதியும் மாய எண்ணங்கள், இவை இரண்டிற்கும் ஆன்மாவே காரணம் ஆக இவை ஆன்மவிலிருந்தே தோன்றுகின்றன, ஆன்மாவிலேயே பதியப் படுகின்றன. இதில் தோன்றும் எண்ணங்கள் உடலால் நிறைவேற்றப் படுகின்றன. உதராணத்திற்கு சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது, அந்த தேவையை உடல் நிறைவேற்றுகிறது, சாப்பிட்ட நிறைவு ஆன்மாவில் பதிகிறது. இதுபோன்று எல்லா நினைவுகளும் ஆன்மாவில் பதியப்படுகிறது. மரணம் என்ற நிலை மாற்றம் நிகழும் போது உடல் வேறு நிலைக்கு மாறிவிடுகிறது, பதியப் பட்ட நினைவுகளுடன் ஆன்மா தன்னில் உள்ள நினைவுகள் முற்றும் நீங்கும் வரை அவதியுருகிறது இதையே நரகம் எனலாம். தன்னில் பதிந்த நினைவுகள் முற்றிலும் நீங்கிய ஆத்மா சாந்தி அடைகிறது இதை சொர்கம் எனலாம்.

இதை சிறிய உதாரணம் மூலம் அறியலாம் நம் வாழ்வில் நமக்கு(மனதுக்கு) மிகவும் வேதனை அளிக்கும் சம்பவம் ஒன்று நடந்து விட்டால் நடந்த மூன்று நாளைக்கு மிகவும் வேதனையாய் இருக்கும் மனம் ரணமாய் இருக்கும், ஏழு நாள் கழித்து அதைவிட கொஞ்சம் குறைவாய் இருக்கும், நாற்பது நாள் கழித்து அதைவிட கொஞ்சம் குறைவாய் இருக்கும் ஒரு வருடம் கழித்து மனம் கொஞ்சம் மறந்திருக்கும். அது வரை ஆன்மா படும் வேதனை இருக்கிறதே அது தான் நரக வேதனையாய் இருக்கும், இதே போல் தான் இறந்த பிறகும் எல்லா ஆன்மாக்களும் இதை அனுபவித்தே தீரவேண்டும், இதைத் திருக் குர்ஆன் 19:17 ல் ‘நரகை கடக்காமல் யாரும் (போக) முடியாது’ என்று கூறுகிறது. உடலை பிரிந்த எல்லா ஆன்மாக்களும் அந்த நினைகளுடன் பிரிகிறது அது முற்றிலும்மாக அதிலிருந்து விடுதலைப் பெறும் வரை அந்த வேதனையை அனுபவித்து தான் ஆக வேண்டும், இதற்காகத்தான் முன்னோர்கள் உடலைப் பிரிந்த ஆன்மாவுக்கு அதன் நினைவுகளிலிருந்து விடுதலை வேண்டி மூன்றாம் நாள், ஏழாம், நாற்பதாம் நாள் எல்லாம் அன்ன தானம் கொடுத்து எல்லோரையும் பிரார்த்திக்க சொல்லி அந்த பிரார்த்தனையை செய்வார்கள்.

ஆக உடலை பரிந்த ஆன்மா தன் வாழ்நாளில் பதிந்த அத்தனை நினைவுகளையும் உடனடியாக துறக்க முடியாது அதனதன் அறிவு தன்மைக்கு ஏற்ப வலிமைக்கு ஏற்ப அது தன் நினைவை துறக்கும். இதைத் தான் சிலர் மின்னல் வேகத்தில் நரகை கடப்பர், சிலர் குதிரை வேகத்தில் நரகை கடப்பர், சிலர் ஓட்ட வேகத்தில் நரகை கடப்பர் சிலர் அதில் வழுக்கி விழுந்துவிடுவர் என்று ஒரு நபி மொழியில் சொல்லப் படும். இந்த வாழ்வே ஒரு பெருங்கனவு தான் இதிலிருந்து எப்போது வேண்டுமானலும் நாம் விழித்துக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவன் ஞானி, இதுவே உண்மை என்று இந்த மாய வாழ்கையில் உலல்பவன் அஞ்ஞானி, ஆகவே தான் வாழ்வை தாமரையிலை தண்ணீர் போல வாழ வேண்டும் என்று சொல்வதன் அர்த்தம் இது தான் இலையை கவிழ்த்தால் இலையில் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கூட இருக்காது. அது போல் இந்த ஆன்மா உடலை விட்டால் எந்த நினைவும் அதில் பதியாமல் பார்த்துக் கொள்பவனே ஞானி.

ஆகவே தான் ஒரு நபி மொழியில் ‘மரணத்திற்கு முன் மரணம் அடைந்துவிடுங்கள்’ என்று சொல்லப் பட்டிருக்கிறது இதன் அர்த்தம் உடலை விட்டு ஆன்மா பிரிந்த பின் துறக்க வேண்டிய நினைவுகளை உடலுடன் இருக்கும் போதே துறந்து விடுங்கள் என்பதாகும். இதை அறிந்து எதிலும் பற்றில்லாமல் வாழ்பவன் இல்லறத் துறவி. எண்ணங்கள் ஆன்மாவில் பதிவதை துறப்பவன் தான் உண்மை துறவி.

கனவு காண்பவர்கள் யாரும் கனவு காண்பதாக காணும் நேரத்தில் உணரமாட்டார்கள், அதே போலத்தான் இந்த உலகில் வாழ்பவர்கள் வாழ்கையில் மூழ்கி இதை கனவு என்று ஏற்க மறுப்பார்கள் திடிரென்று ஒரு நாள் விழிப்பு வரும் உண்மை நிலைமை புரியும் ‘நான்’ என்ற நினைவு வெறும் குறுகிய கால நினைவு என்று அந்த ஆன்மா உணரும், வாழ்கையில் உருவாக்கி வைத்த ‘தான்’ என்ற நினைவுகள் நீங்காமல் அந்த ஆத்மா கஷ்டபடும்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் நம் பிற்கால வாழ்வை சுகமானதாக்கி வைப்பானாக ஆமின்.

வியாழன், செப்டம்பர் 09, 2010

ஏகத்துவம்

தவ்ஹித்

தவ்ஹித் என்ற வார்தைக்கு அர்த்தம் தெரியாமலே தவ்ஹித் வாதிகள் என்று கூட்டம் புலம்பிக் கொண்டிருக்கிறது தவ்ஹித் என்றால் ஏகத்துவம். ஒன்றை தவிர ஒன்றும் இல்லை என்பது தான் இதன் உண்மையான அர்த்தம் தூய தமிழில் அத்வைதம் என்பார்கள்.
அவனே அனைத்துமாய் இருக்கிறான், சூரா ஹதிதில் இறைவன் சொல்கிறான், ‘அவனே ஆரம்பம் அவனே முடிவு, அவனே அந்தரங்கம் அவனே வெளிரங்கம்” 57:2 ஓன்று ஆரம்பமாகவும் முடிவாகவும் இருக்கும் போது இடையில் வேறு எது இருக்க முடியும், ஆக அதுவே அனைத்தும், இறைவன் தூணிலிமிருக்கிறான் துரும்பிழுமிருக்கிறான் என்ற வார்த்தை இந்த வசனத்தை அடிபடையாகக் கொண்டது.


இறைவனுக்கு நாற்காலி போட்டு வானத்தில் உட்கார வைத்திருப்பவர்கள் எப்படி ஏகத்துவ வாதிகளாக முடியும் இப்போது அதையும் தாண்டி இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்று மேடைப் போட்டு வாதம் செய்யக் கூடியவர்கள், அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் விக்ரக நிக்ரகம் செய்துவிட்ட இறைநேசர்களை தூசணம் செய்வது மிகவும் சிறுபிள்ளை தனமானது.

மற்றவர்களைப் பார்த்து இவர்கள் ஷிர்க் செய்கிறார்கள் என்று கூறும் பீஜை வாதிகள் இறைவனுக்கு உருவம் கொடுத்து மிகப் பெரிய ஷிர்க் செய்கிறார்கள் எந்த இறைநேசரும் இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லவில்லை. இவர்கள் எப்படியாவது உருவ வழிபாட்டை கொண்டுவந்து விடலாம் ஒரு இந்து மதத்தைப் போல ஒரு கிறிஸ்த்துவ மதத்தைப் போல இஸ்லாத்தையும் ஆக்கி விடலாம் என்று கனா காணுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க போதுமானவன்.