புதன், ஏப்ரல் 21, 2010

இழப்பதற்கு முன்




இன்று நாம் சகல உறுப்புகளின் முழு வளர்சியுடனும் அதன் சிறப்பான உழைப்புத் திறனுடமும் ஆரோக்கியத்துடன் உலா வருகிறோம். ஓவ்வொரு மனிதனுக்கும் சிறந்த ஆரோக்கியம் இருக்கும் போது தான் அவனால் மற்ற விசயங்களில் கவனம் செலுத்த முடியும். ஆனால் மனிதனோ தான் ஆரோக்கியத்தில் கவனம் செழுத்துவதே இல்லை.

மனிதனிடம் விலை மதிக்க முடியாத வைரமே கையில் இருந்தாலும் அது தன்னிடம் இருக்கும் வரை அதன் மதிப்பு அவனால் கவனத்தில் கொள்ளப் படுவதில்லை. வைரத்தினும் பல கோடி மடங்கு மதிப்பு உள்ள வாழ்கை, ஆரோக்கியம் போன்றவை நம்மால் அலட்சியப் படுத்தப் படுகிறது. வாழ்கையின் இறுதியில் வீணடித்து விட்டோமே என்ற உணர்வு வருகிறது. நம்மால் எந்த பயனும் யாருக்கும் விளையவில்லையே என்று வருந்துவோரே மிக குறைவு.

ஆரோக்கியமும் அப்படித்தான் உடல் நலக்கேடு வந்த பின் தான் ஆரோக்கியத்தின் அருமை புரியும். நிழலின் அருமை வெயிலில் தெரியும், தண்ணீரின் அருமை தாகத்தில் தெரியும், இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை, இந்த உடலை உருவாக்குவதில் நமக்கு எந்த விதமான பங்கும் இல்லை, இந்த உடல் நம்மிடம் ஓப்படைக்கப் பட்ட ஒரு அனாமத்து பொருள் அதைப் போற்றி பாதுகாக்க வேண்டியது நம் தலையாய கடமை.

இந்த உடலை சேதப் படுத்தவோ அதன் உறுப்புகளை குழைப்பதற்கோ நமக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்த உடல் உங்கள் ஆன்மா இந்த உலகத்தில் வாழ இறைவனால் அளிக்கப் பட்ட வீடு, இது முழுக்க முழுக்க இறைவனால் அளிக்கப்பட்ட நன்கொடை, இந்த வீட்டை சேதப் படுத்த நமக்கு அணுவளவும் உரிமையில்லை, இதை நாம் உணர்கிறோம் இல்லை நாம் குடியிருக்கும் வீட்டை நாம் அறிந்தோ அறியாமலோ சேதப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

புகை பிடிக்கும் பழக்கம் இன்று நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கிறது, புகையிலையை பற்ற வைத்து அதன் கடுமையான புகையை உள்ளிழுத்து விடுகிறோம் நுரையிரலில் அதன் கழிவுகள் படிகிறது இதனால் ஏற்படும் விளைவுகளை இன்று மருத்துவம் கூறிக்கொண்டிருக்கிறது. இறைவன் நம்மீது புரிந்திருக்கும் கருணையைப் பாருங்கள், புறவெளியில் காற்றில் வேறு பல வகையான வாயுகளும் அசுத்தங்களும் கலந்திருக்கின்றன் என்பதற்;;காக நமக்கு வேண்டிய ஆக்ஸிஜனை மட்டும் அவற்றிலிருந்து பிரித்தெடுத்து இரத்ததிற்கு கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான நுண்ணிய அறைகள் கொண்ட நுரையிரலை இறைவன் படைத்திருக்கிறான்.

நாம் என்ன செய்கிறோம் புகையிலையின் நச்சு புகையை உள்ளே செழுத்துகிறோம், அந்த நுரையிரல் வாயிருந்தால் நம்மை சபிக்கும் பாவி மனிதனே இதற்காகவா நான் படைக்கப் பட்டேன் என்று கூறும்.

குடிப்பழக்கமும் அது போல் தான் உடலுக்கு தேவையில்லாத திரவத்தை குடலுக்குள் இறக்குகிறோம் இதனால் கல்லிரல் பெருமளவு பாதிக்கப் படுகிறது. உடலில் சர்கரையின் அளவை இரத்ததில் சரியாக வைத்துக் கொள்ளவும், இரத்ததிலிருந்து நச்சுத் தன்மையை நீக்கவும், இரத்த உற்பத்திக்கும் பயன்படும் கல்லீரல் ஒரு கடுந்திரவத்தால் பாதிக்கப் படுகிறது. இது போன்று உடல் உறுப்புகளை சேதப்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை.

சுண்டு விரலின் நகத்தைக் கூட நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்ற நிலை இருக்கயில் நாம் ஏன் அப்படி செய்கிறோம் என்பது தான் விளங்கவில்லை. இன்னும் சில விசயங்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது விலங்குகள் கூட செய்யாத கடுமையான செயல் கடுமையான போதைப் பொருட்களை மனிதன் உட்கொள்கிறான் ஒரு பத்திரிகையில் படிக்க நேர்ந்த விசயம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது போதைக்காக சில குறைந்த விசமுள்ள விச ஜந்துகளை நாக்கில் கொட்ட வைக்கிறார்களாம் இந்த உடல் எக்கேடு கெட்டால் எனக்கென்ன எனக்கு வேண்டியது இந்த அற்ப சுகம் என்ற நோக்கில் தான் மனிதன் செயல் படுகிறான்.

எங்கோ படித்த கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது, முன்பொரு காலத்தில் ஒரு வழிப் போக்கன் தன் குதிரையில் பிரயாணம் செய்துக் கொண்டிருந்தானாம் ஒரு நாள் இரவு வேளையில் கடற்கரை வழியே பயணிக்க நேர்ந்ததாம் நிலவொளியில் பளிச் பளிச் என்று கடற்கரையில் கொட்டிக் கிடந்த கற்குவியல் மின்னியதாம் அழகாய் இருக்கிறதே என்று தன் சட்டை பைகளில் நிரப்பிக் கொண்டானாம் வழி நெடுக விளையாட்டாக அந்த கற்களை வீசிக் கொண்டே வந்தானாம்.

இறுதியில் ஒரு பட்டினத்தை நெருங்கிய போது பசி வயிற்றைக் கிள்ள உணவருந்த நினைத்தானாம் தன்னிடம் காசு ஏதும் இல்லாமல் போகவே தான் கடற்கரையில் கண்டெடுத்த ஒரு கல் மட்டும் எஞ்சியிருந்ததாம் அதை அங்கிருந்த ஒரு வணிகனிடம் கொடுத்து ஏதேனும் காசு கொடுக்கும் படி கேட்டானாம்.

அந்த வணிகனோ அந்த கல்லைப் பார்த்துவிட்டு இது மிகவும் விலை மதிப்புள்ள கல் இது பல ஆயிரம் வெள்ளிக் காசுகள் பெறும் என்றும் இது போன்று வேறு கற்கள் இருந்தால் தான் எடுத்துக் கொள்வதாகவும் கூறினானாம். வழிப்போக்கன் வேகமாக தன் சட்டைப் பைகளில் தேடினானாம் ஆனால் அவன் கையிpலிருந்ததே கடைசி கல்லாக இருந்ததாம், அந்த வழிப்போக்கன் மிகவும் மனம் வருந்தினானாம் விலை மதிப்புள்ள கற்களை இப்படி வீணடித்து விட்டோமே என்று.

நம் வாழ்நாளும் ஆரோக்கியமும் இப்படித்தான் அந்த விலைமதிப்புள்ள கற்கள் அதன் மதிப்பு கடைசி நாளின் போது தான் தெரியும்.

திங்கள், ஏப்ரல் 19, 2010

செய்ய மறந்தது மறப்பது

செய்ய மறந்தது மறப்பது





நமக்கு வாழ்வில் எது முக்கியம் எது முக்கியமற்றது, எதை முதலில் செய்வது எதை இரண்டாவது செய்வது என்பன முடிவெடுப்பதில் வாழ்கை நெடுகிலும் தடுமாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்கை, ஆரோக்கியம், செல்வம், போன்றவை நம்மிடம் இருக்கும் போது அதன் மதிப்பு தெரிவதில்லை, அவற்றை நாம் இழந்த பின் தான் ஆகா இப்படி செய்திருக்கலாமே அப்படி செய்திருக்காலேமே என்று நினைப்பதுண்டு, இது மனித பலகீனம், நிரந்தர சந்தோசங்களை விட்டு விட்டு தற்காலிக சந்தோசங்களே நம்மை திருப்தி படுத்தி விடுகின்றன. அந்த காலங்களை கடந்த பின்பு இழந்துவிட்ட சந்தர்பங்களை எண்ணி வருந்துகின்றோம்.

என் மனதை தொட்ட கதை ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

நல்ல உடல் ஆரோக்கியமும் செல்வ செல்வாக்குடனும் வாழ்ந்த அரசனுக்கு நான்கு மனைவியர்கள் இருந்தனராம். அரசன் தன் நான்காவது மனைவிக்கு தேவைப்பட்ட ஆடை அணிகலன் எல்லாம் வாங்கிக் கொடுத்து அவளை அன்புடன் பார்த்துக் கொண்டானாம்.

தன் மூன்றாவது மனைவிடமும் அவன் மிகவும் அன்பு செழுத்தினானாம் அவளுடைய ஆசையையும் நிறைவேற்றி வைத்தானாம், ஆனால் அரசனுக்கு, தன்னை விட சிறந்தவன் அவளுக்கு கிடைத்தால் தன்னை விட்டு போய்விடுவாளோ என்ற அச்சமும் இருந்ததாம்.

அரசன் இரண்டாவது மனைவியையும் மனம் கோணாது பார்த்துக் கொண்டானாம் அவளின் தேவையையும் சிறப்பாக நிறைவேற்றி வைத்தானாம், அவளும் அவனிடம் அன்பாக இருந்தாளாம் அவன் தளாந்த சமயங்களில் அவனுக்கு நம்பிக்கையூட்டி கஷ்டமான சமயங்களில் தக்க ஆலோசனை வழங்கி அவனுக்கு மிகவும் உதவியாய் இருந்தாளாம்.

அரசனின் முதல் மனைவியோ மிகவும் நன்றி உள்ளவளாகவும் அரசனை ஆதரவுடன் கவனித்துக் கொள்பவளாகவும் அரசாங்க நிர்வாக சிக்கல்களில் உதவுபவளாகவும் அரசனை உள்ளார நேசிப்பவளாகவும் இருந்தாளாம். அரசனால் இதை உணர முடிந்தாலும் மற்ற மனைவிகளிடம் செலுத்தும் அன்பை செலுத்துவதில்லை முதல் மனைவியிடம் ஆர்வமும் காட்டுவதில்லை ஆனாலும் அவள் தன் கடமையை செய்து வந்தாளாம்.

ஒரு நாள் அரசன் நோயில் விழுந்தானாம், தன் இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த அரசன் இவ்வளவு செல்வ செல்வாக்கோடு வாழ்ந்த நாம் இறப்பில் மட்டும் தனியாகி விடப் போகிறோமே என்ற உணர்ந்த அரசன் தன் நான்கு மனைவிகளையும் கூப்பிட்டு, நான் என் வாழ்நாளில் உங்கள் நால்வரையும் சிறப்பாக வைத்திருந்தேன் என் மரண காலம் நெருங்கி கொண்டு வருகிறது என் மரணத்தில் என்னுடன் வரப் போவது யார் என்று கேட்டானாம்.

நான்காவது மனைவி என்னால் முடியாது என்ற ஒரே வார்த்தையுடன் அங்கிருந்து அகன்று விட்டாளாம்;. அரசனின் இதயத்தில் கத்திப பாய்ந்து போன்று உணர்ந்தானாம்

மூன்றாவது மனைவியிடம் கேட்டப் போது அவள் சொன்னாளாம் வாழ்கை மிகவும் விலை மதிக்க முடியாதது உங்களுக்கு பின் நான் வேறோரு திருமணம் செய்துக் கொண்டு வாழ்வேன் என்று கூறி அகன்று விட்டாளாம். இதைக் கேட்டதும் அரசன் மிகவும் நொறுங்கி விட்டானாம்.

இரண்டாவது மனைவியோ என்னால் உங்கள் கூட கடைசி வரை வரமுடியாது உங்கள் கல்லரை வரை வந்து மலர் வைத்து திரும்பி விடுவேன் என்றாளாம். ஓன்றும் சொல்ல முடியாதவனாக அரசன் கண்ணீர் விட்டானாம்.

உண்மையை உணர்ந்த அரசன் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று பரிதவித்தானாம்.

தன்னால் அதிகம் நேசிக்கப் படாத முதல் மனைவியிடம் அவன் எதுவும் கேட்க வில்லையாம் மௌனமாய் இருந்த அரசனிடம் முதல் மனைவி பேசினாளாம் நான் உங்களுடன் வருவேன் நிங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் தான் இருப்பேன் உங்கள் சுக துக்கங்களை நான் பகிர்ந்து கொள்வேன் என்றாளாம்.

அரசன் கண்ணிருடன் அவளைப் பார்த்தானம்.

இங்கே நான்கு மனைவிகளாக உருவகப் படுத்தப் படுவது.

நான்காவது மனைவியாக உடலும்

மூன்றாவது மனைவியாக செல்வம், செல்வாக்கு, தகுதி

இரண்டாவது மனைவியாக குடும்பம், உறவினர்

முதலாவது மனைவியாக நம் ஆன்மா

நம் வாழ்நாளில் நம்மால் அதிகம் புறக்கணிக்கப் படுவது நமது ஆன்மா நிலையான நம் ஆன்மாவிற்கு நாம் செய்த நன்மைகள் என்ன? இந்த வாழ்கை, செல்வம், குடும்பம், சந்தோசம் அனைத்தையும் அனுபவிக்க மூலதாரம் இந்த ஆன்மா நாம் அதற்கு செய்தது என்ன என்று எண்ணிப் பார்ப்பது எத்தனைப் பேர். ஆன்ம அறிவே நித்திய, சத்திய அறிவு, மற்ற எல்லாம் உடலுடன் ஒழியும் மாயை. உண்மை அறிவோம் நன்மை பெறுவோம்.