திங்கள், ஏப்ரல் 19, 2010

செய்ய மறந்தது மறப்பது

செய்ய மறந்தது மறப்பது





நமக்கு வாழ்வில் எது முக்கியம் எது முக்கியமற்றது, எதை முதலில் செய்வது எதை இரண்டாவது செய்வது என்பன முடிவெடுப்பதில் வாழ்கை நெடுகிலும் தடுமாற்றம் இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்கை, ஆரோக்கியம், செல்வம், போன்றவை நம்மிடம் இருக்கும் போது அதன் மதிப்பு தெரிவதில்லை, அவற்றை நாம் இழந்த பின் தான் ஆகா இப்படி செய்திருக்கலாமே அப்படி செய்திருக்காலேமே என்று நினைப்பதுண்டு, இது மனித பலகீனம், நிரந்தர சந்தோசங்களை விட்டு விட்டு தற்காலிக சந்தோசங்களே நம்மை திருப்தி படுத்தி விடுகின்றன. அந்த காலங்களை கடந்த பின்பு இழந்துவிட்ட சந்தர்பங்களை எண்ணி வருந்துகின்றோம்.

என் மனதை தொட்ட கதை ஒன்றை இங்கே உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

நல்ல உடல் ஆரோக்கியமும் செல்வ செல்வாக்குடனும் வாழ்ந்த அரசனுக்கு நான்கு மனைவியர்கள் இருந்தனராம். அரசன் தன் நான்காவது மனைவிக்கு தேவைப்பட்ட ஆடை அணிகலன் எல்லாம் வாங்கிக் கொடுத்து அவளை அன்புடன் பார்த்துக் கொண்டானாம்.

தன் மூன்றாவது மனைவிடமும் அவன் மிகவும் அன்பு செழுத்தினானாம் அவளுடைய ஆசையையும் நிறைவேற்றி வைத்தானாம், ஆனால் அரசனுக்கு, தன்னை விட சிறந்தவன் அவளுக்கு கிடைத்தால் தன்னை விட்டு போய்விடுவாளோ என்ற அச்சமும் இருந்ததாம்.

அரசன் இரண்டாவது மனைவியையும் மனம் கோணாது பார்த்துக் கொண்டானாம் அவளின் தேவையையும் சிறப்பாக நிறைவேற்றி வைத்தானாம், அவளும் அவனிடம் அன்பாக இருந்தாளாம் அவன் தளாந்த சமயங்களில் அவனுக்கு நம்பிக்கையூட்டி கஷ்டமான சமயங்களில் தக்க ஆலோசனை வழங்கி அவனுக்கு மிகவும் உதவியாய் இருந்தாளாம்.

அரசனின் முதல் மனைவியோ மிகவும் நன்றி உள்ளவளாகவும் அரசனை ஆதரவுடன் கவனித்துக் கொள்பவளாகவும் அரசாங்க நிர்வாக சிக்கல்களில் உதவுபவளாகவும் அரசனை உள்ளார நேசிப்பவளாகவும் இருந்தாளாம். அரசனால் இதை உணர முடிந்தாலும் மற்ற மனைவிகளிடம் செலுத்தும் அன்பை செலுத்துவதில்லை முதல் மனைவியிடம் ஆர்வமும் காட்டுவதில்லை ஆனாலும் அவள் தன் கடமையை செய்து வந்தாளாம்.

ஒரு நாள் அரசன் நோயில் விழுந்தானாம், தன் இறுதி காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த அரசன் இவ்வளவு செல்வ செல்வாக்கோடு வாழ்ந்த நாம் இறப்பில் மட்டும் தனியாகி விடப் போகிறோமே என்ற உணர்ந்த அரசன் தன் நான்கு மனைவிகளையும் கூப்பிட்டு, நான் என் வாழ்நாளில் உங்கள் நால்வரையும் சிறப்பாக வைத்திருந்தேன் என் மரண காலம் நெருங்கி கொண்டு வருகிறது என் மரணத்தில் என்னுடன் வரப் போவது யார் என்று கேட்டானாம்.

நான்காவது மனைவி என்னால் முடியாது என்ற ஒரே வார்த்தையுடன் அங்கிருந்து அகன்று விட்டாளாம்;. அரசனின் இதயத்தில் கத்திப பாய்ந்து போன்று உணர்ந்தானாம்

மூன்றாவது மனைவியிடம் கேட்டப் போது அவள் சொன்னாளாம் வாழ்கை மிகவும் விலை மதிக்க முடியாதது உங்களுக்கு பின் நான் வேறோரு திருமணம் செய்துக் கொண்டு வாழ்வேன் என்று கூறி அகன்று விட்டாளாம். இதைக் கேட்டதும் அரசன் மிகவும் நொறுங்கி விட்டானாம்.

இரண்டாவது மனைவியோ என்னால் உங்கள் கூட கடைசி வரை வரமுடியாது உங்கள் கல்லரை வரை வந்து மலர் வைத்து திரும்பி விடுவேன் என்றாளாம். ஓன்றும் சொல்ல முடியாதவனாக அரசன் கண்ணீர் விட்டானாம்.

உண்மையை உணர்ந்த அரசன் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று பரிதவித்தானாம்.

தன்னால் அதிகம் நேசிக்கப் படாத முதல் மனைவியிடம் அவன் எதுவும் கேட்க வில்லையாம் மௌனமாய் இருந்த அரசனிடம் முதல் மனைவி பேசினாளாம் நான் உங்களுடன் வருவேன் நிங்கள் எங்கு சென்றாலும் உங்களுடன் தான் இருப்பேன் உங்கள் சுக துக்கங்களை நான் பகிர்ந்து கொள்வேன் என்றாளாம்.

அரசன் கண்ணிருடன் அவளைப் பார்த்தானம்.

இங்கே நான்கு மனைவிகளாக உருவகப் படுத்தப் படுவது.

நான்காவது மனைவியாக உடலும்

மூன்றாவது மனைவியாக செல்வம், செல்வாக்கு, தகுதி

இரண்டாவது மனைவியாக குடும்பம், உறவினர்

முதலாவது மனைவியாக நம் ஆன்மா

நம் வாழ்நாளில் நம்மால் அதிகம் புறக்கணிக்கப் படுவது நமது ஆன்மா நிலையான நம் ஆன்மாவிற்கு நாம் செய்த நன்மைகள் என்ன? இந்த வாழ்கை, செல்வம், குடும்பம், சந்தோசம் அனைத்தையும் அனுபவிக்க மூலதாரம் இந்த ஆன்மா நாம் அதற்கு செய்தது என்ன என்று எண்ணிப் பார்ப்பது எத்தனைப் பேர். ஆன்ம அறிவே நித்திய, சத்திய அறிவு, மற்ற எல்லாம் உடலுடன் ஒழியும் மாயை. உண்மை அறிவோம் நன்மை பெறுவோம்.

கருத்துகள் இல்லை: