செவ்வாய், அக்டோபர் 05, 2010

வழுக்கல்கள்


வெளிச்சத்திலும்
இருண்டு கிடக்கும்
மனங்கள்
விளக்கை காணமலே
மாண்டு விடும்
விட்டில்கள்

இறக்கவே மாட்டோம்
என்பது போல்
வாழும் மனிதர்கள்
வாழவே இல்லை
என்பது போல்
இறக்கும் மனிதர்கள்

ஆசை எனும்
ஈரமான தலையில்
தேவை என்ற
பாரமான சுமைகளுடன்
சுகமாய் வாழ்வதாய்
நமக்குள் ஒரு
சொப்பனம்

விடிந்த பிறகும்
திறக்க மறுக்கும்
இமைகள்
அறிந்த பிறகும்
உணர மறுக்கும்
மனங்கள்.

இப்படி
வாழ்கை எனும்
பாதையில்
வழிநெடுக
வழுக்கல்கள்.

7 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

அருமையான ஆழமான கவிதை

Unknown சொன்னது…

தலைப்பில் மட்டும்தான், கருத்துகளில் இல்லவே இல்லை ‘வழுக்கல்’.

VELU.G சொன்னது…

அருமையான வரிகள்

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, திரு இஸமத், திரு கதிம் அண்ணன், திரு வேலு.

அரபுத்தமிழன் சொன்னது…

பின்னூட்ட வழி நூல் பிடித்து வந்து இங்கே வழுக்கி விழுந்தேன் இன்று :)

நீங்களும் பதிவர்தாமா ?

அன்புடன் மலிக்கா சொன்னது…

வழுக்கலில் வழுக்காமல் வார்தைகள்.
வாழ்த்துக்கள்..

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மலிக்கா