புதன், ஏப்ரல் 21, 2010

இழப்பதற்கு முன்




இன்று நாம் சகல உறுப்புகளின் முழு வளர்சியுடனும் அதன் சிறப்பான உழைப்புத் திறனுடமும் ஆரோக்கியத்துடன் உலா வருகிறோம். ஓவ்வொரு மனிதனுக்கும் சிறந்த ஆரோக்கியம் இருக்கும் போது தான் அவனால் மற்ற விசயங்களில் கவனம் செலுத்த முடியும். ஆனால் மனிதனோ தான் ஆரோக்கியத்தில் கவனம் செழுத்துவதே இல்லை.

மனிதனிடம் விலை மதிக்க முடியாத வைரமே கையில் இருந்தாலும் அது தன்னிடம் இருக்கும் வரை அதன் மதிப்பு அவனால் கவனத்தில் கொள்ளப் படுவதில்லை. வைரத்தினும் பல கோடி மடங்கு மதிப்பு உள்ள வாழ்கை, ஆரோக்கியம் போன்றவை நம்மால் அலட்சியப் படுத்தப் படுகிறது. வாழ்கையின் இறுதியில் வீணடித்து விட்டோமே என்ற உணர்வு வருகிறது. நம்மால் எந்த பயனும் யாருக்கும் விளையவில்லையே என்று வருந்துவோரே மிக குறைவு.

ஆரோக்கியமும் அப்படித்தான் உடல் நலக்கேடு வந்த பின் தான் ஆரோக்கியத்தின் அருமை புரியும். நிழலின் அருமை வெயிலில் தெரியும், தண்ணீரின் அருமை தாகத்தில் தெரியும், இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்ட அற்புதமான அருட்கொடை, இந்த உடலை உருவாக்குவதில் நமக்கு எந்த விதமான பங்கும் இல்லை, இந்த உடல் நம்மிடம் ஓப்படைக்கப் பட்ட ஒரு அனாமத்து பொருள் அதைப் போற்றி பாதுகாக்க வேண்டியது நம் தலையாய கடமை.

இந்த உடலை சேதப் படுத்தவோ அதன் உறுப்புகளை குழைப்பதற்கோ நமக்கு எந்தவித உரிமையும் இல்லை. இந்த உடல் உங்கள் ஆன்மா இந்த உலகத்தில் வாழ இறைவனால் அளிக்கப் பட்ட வீடு, இது முழுக்க முழுக்க இறைவனால் அளிக்கப்பட்ட நன்கொடை, இந்த வீட்டை சேதப் படுத்த நமக்கு அணுவளவும் உரிமையில்லை, இதை நாம் உணர்கிறோம் இல்லை நாம் குடியிருக்கும் வீட்டை நாம் அறிந்தோ அறியாமலோ சேதப் படுத்திக் கொண்டிருக்கிறோம்.

புகை பிடிக்கும் பழக்கம் இன்று நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கிறது, புகையிலையை பற்ற வைத்து அதன் கடுமையான புகையை உள்ளிழுத்து விடுகிறோம் நுரையிரலில் அதன் கழிவுகள் படிகிறது இதனால் ஏற்படும் விளைவுகளை இன்று மருத்துவம் கூறிக்கொண்டிருக்கிறது. இறைவன் நம்மீது புரிந்திருக்கும் கருணையைப் பாருங்கள், புறவெளியில் காற்றில் வேறு பல வகையான வாயுகளும் அசுத்தங்களும் கலந்திருக்கின்றன் என்பதற்;;காக நமக்கு வேண்டிய ஆக்ஸிஜனை மட்டும் அவற்றிலிருந்து பிரித்தெடுத்து இரத்ததிற்கு கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான நுண்ணிய அறைகள் கொண்ட நுரையிரலை இறைவன் படைத்திருக்கிறான்.

நாம் என்ன செய்கிறோம் புகையிலையின் நச்சு புகையை உள்ளே செழுத்துகிறோம், அந்த நுரையிரல் வாயிருந்தால் நம்மை சபிக்கும் பாவி மனிதனே இதற்காகவா நான் படைக்கப் பட்டேன் என்று கூறும்.

குடிப்பழக்கமும் அது போல் தான் உடலுக்கு தேவையில்லாத திரவத்தை குடலுக்குள் இறக்குகிறோம் இதனால் கல்லிரல் பெருமளவு பாதிக்கப் படுகிறது. உடலில் சர்கரையின் அளவை இரத்ததில் சரியாக வைத்துக் கொள்ளவும், இரத்ததிலிருந்து நச்சுத் தன்மையை நீக்கவும், இரத்த உற்பத்திக்கும் பயன்படும் கல்லீரல் ஒரு கடுந்திரவத்தால் பாதிக்கப் படுகிறது. இது போன்று உடல் உறுப்புகளை சேதப்படுத்த நமக்கு எந்த உரிமையும் இல்லை.

சுண்டு விரலின் நகத்தைக் கூட நம்மால் உற்பத்தி செய்ய முடியாது என்ற நிலை இருக்கயில் நாம் ஏன் அப்படி செய்கிறோம் என்பது தான் விளங்கவில்லை. இன்னும் சில விசயங்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது விலங்குகள் கூட செய்யாத கடுமையான செயல் கடுமையான போதைப் பொருட்களை மனிதன் உட்கொள்கிறான் ஒரு பத்திரிகையில் படிக்க நேர்ந்த விசயம் என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது போதைக்காக சில குறைந்த விசமுள்ள விச ஜந்துகளை நாக்கில் கொட்ட வைக்கிறார்களாம் இந்த உடல் எக்கேடு கெட்டால் எனக்கென்ன எனக்கு வேண்டியது இந்த அற்ப சுகம் என்ற நோக்கில் தான் மனிதன் செயல் படுகிறான்.

எங்கோ படித்த கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது, முன்பொரு காலத்தில் ஒரு வழிப் போக்கன் தன் குதிரையில் பிரயாணம் செய்துக் கொண்டிருந்தானாம் ஒரு நாள் இரவு வேளையில் கடற்கரை வழியே பயணிக்க நேர்ந்ததாம் நிலவொளியில் பளிச் பளிச் என்று கடற்கரையில் கொட்டிக் கிடந்த கற்குவியல் மின்னியதாம் அழகாய் இருக்கிறதே என்று தன் சட்டை பைகளில் நிரப்பிக் கொண்டானாம் வழி நெடுக விளையாட்டாக அந்த கற்களை வீசிக் கொண்டே வந்தானாம்.

இறுதியில் ஒரு பட்டினத்தை நெருங்கிய போது பசி வயிற்றைக் கிள்ள உணவருந்த நினைத்தானாம் தன்னிடம் காசு ஏதும் இல்லாமல் போகவே தான் கடற்கரையில் கண்டெடுத்த ஒரு கல் மட்டும் எஞ்சியிருந்ததாம் அதை அங்கிருந்த ஒரு வணிகனிடம் கொடுத்து ஏதேனும் காசு கொடுக்கும் படி கேட்டானாம்.

அந்த வணிகனோ அந்த கல்லைப் பார்த்துவிட்டு இது மிகவும் விலை மதிப்புள்ள கல் இது பல ஆயிரம் வெள்ளிக் காசுகள் பெறும் என்றும் இது போன்று வேறு கற்கள் இருந்தால் தான் எடுத்துக் கொள்வதாகவும் கூறினானாம். வழிப்போக்கன் வேகமாக தன் சட்டைப் பைகளில் தேடினானாம் ஆனால் அவன் கையிpலிருந்ததே கடைசி கல்லாக இருந்ததாம், அந்த வழிப்போக்கன் மிகவும் மனம் வருந்தினானாம் விலை மதிப்புள்ள கற்களை இப்படி வீணடித்து விட்டோமே என்று.

நம் வாழ்நாளும் ஆரோக்கியமும் இப்படித்தான் அந்த விலைமதிப்புள்ள கற்கள் அதன் மதிப்பு கடைசி நாளின் போது தான் தெரியும்.

2 கருத்துகள்:

mohamedali jinnah சொன்னது…

``இந்த அவார்டை தந்து சிறப்பித்த கிளியனூர் கவிஞர் இஸ்மத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி``

தகுதியானர்தான்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பரே.