வியாழன், செப்டம்பர் 09, 2010

ஏகத்துவம்

தவ்ஹித்

தவ்ஹித் என்ற வார்தைக்கு அர்த்தம் தெரியாமலே தவ்ஹித் வாதிகள் என்று கூட்டம் புலம்பிக் கொண்டிருக்கிறது தவ்ஹித் என்றால் ஏகத்துவம். ஒன்றை தவிர ஒன்றும் இல்லை என்பது தான் இதன் உண்மையான அர்த்தம் தூய தமிழில் அத்வைதம் என்பார்கள்.
அவனே அனைத்துமாய் இருக்கிறான், சூரா ஹதிதில் இறைவன் சொல்கிறான், ‘அவனே ஆரம்பம் அவனே முடிவு, அவனே அந்தரங்கம் அவனே வெளிரங்கம்” 57:2 ஓன்று ஆரம்பமாகவும் முடிவாகவும் இருக்கும் போது இடையில் வேறு எது இருக்க முடியும், ஆக அதுவே அனைத்தும், இறைவன் தூணிலிமிருக்கிறான் துரும்பிழுமிருக்கிறான் என்ற வார்த்தை இந்த வசனத்தை அடிபடையாகக் கொண்டது.


இறைவனுக்கு நாற்காலி போட்டு வானத்தில் உட்கார வைத்திருப்பவர்கள் எப்படி ஏகத்துவ வாதிகளாக முடியும் இப்போது அதையும் தாண்டி இறைவனுக்கு உருவம் இருக்கிறது என்று மேடைப் போட்டு வாதம் செய்யக் கூடியவர்கள், அந்தரங்கத்திலும் பகிரங்கத்திலும் விக்ரக நிக்ரகம் செய்துவிட்ட இறைநேசர்களை தூசணம் செய்வது மிகவும் சிறுபிள்ளை தனமானது.

மற்றவர்களைப் பார்த்து இவர்கள் ஷிர்க் செய்கிறார்கள் என்று கூறும் பீஜை வாதிகள் இறைவனுக்கு உருவம் கொடுத்து மிகப் பெரிய ஷிர்க் செய்கிறார்கள் எந்த இறைநேசரும் இறைவனுக்கு உருவம் உண்டு என்று சொல்லவில்லை. இவர்கள் எப்படியாவது உருவ வழிபாட்டை கொண்டுவந்து விடலாம் ஒரு இந்து மதத்தைப் போல ஒரு கிறிஸ்த்துவ மதத்தைப் போல இஸ்லாத்தையும் ஆக்கி விடலாம் என்று கனா காணுகிறார்கள் என்றே தோன்றுகிறது.

அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாக்க போதுமானவன்.

கருத்துகள் இல்லை: