ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

சாந்தி அளிக்கும் ஸலவாத்


பிஸ்மில்லாஹ்

அகிலங்களின் அருட் கொடையான எம்பெருமான் நபிகள் கோமான் (ஸல்) அவர்கள் அகிலங்களுக்கெல்லாம் ஓர் அருட்கொடை என்று (ரஹ்மத்துல் ஆலமீன்) அகிலங்களின் இறைவன் (ரப்புல் ஆலமீன்) தன் திருமறையில் கூறுகிறான், பெருமானரை அல்லாஹ் இவ்வுலகிற்கு அனுப்பியதன் முக்கிய நோக்கம் மனிதனை மனிதனாக வாழச் செய்வதற்கே. மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் சாந்தி அவசியம்.

அல்லஹ் அவர்களுக்க அளித்த மார்கம் சலாம் என்ற சாந்தியை உள்ளடக்கியதான இஸ்லாம் என்ற அற்புத மார்கத்தை உலகிற்கு அளித்து மனித, ஜின் இனங்கள் சாந்தியாக வாழ வழி செய்தான். இந்த சாந்தியாகப்பட்டது அனைத்து ஜிவராசிகளாலும் தேடப்படுவது, இவ்வுலகில் மட்டும் அல்ல மறுஉலகிலும் மனிதனுக்கு சாந்தியாக வாழ வழி செய்யப்பட்ட மார்கம் தான் இஸ்லாம்.

இந்த மானிட,மற்றும் ஜின் இனங்களின் மீது அல்லாஹ் கொண்ட பெருங்கருணை காரணமாக ரஸீல் (ஸல்) அவர்களையும் அவர்கள் மூலம் சாந்தி மார்கத்தையும் நமக்கு அளித்ததன் நோக்கம் சாந்தி. எங்கும் எப்போதும் சாந்தி நிலவ வேண்டும் என்பதே அல்லாஹ் நோக்கம், மனித, ஜின் இனங்கள் இறை மார்கத்தை சரிவர கடைப் பிடித்தால் சாந்தி நிலவுவது திண்ணம்.

ஆனால் மார்கத்தை சரிவர கடைப்பிடிப்போர் நம்மில் குறைவு, என்றாலும் சாந்தி நிலவ வேண்டும் அதற்காகத்தான் மிக கிருபையாளனான அல்லாஹ் திருமறையில் நமக்கு ஒரு கட்டளையை இறக்குகிறான்; 33:56 ‘ நானும் மலக்குகளும் நபிபெருமான் மீது ஸலவாத் சொல்கிறோம் மூமின்களே நீங்களும் அவர்கள் மீது ஸலவாத் சொல்லுங்கள்’ என்று சொல்கிறான்.

ஸலவாத்தாவது ‘ஸல்லல்லாஹீ அலைகி வஸல்லம்’ இதன் அர்த்தம் நபி (ஸல்) அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்பதாகும் இது நம் அனைவரும் அறிந்ததே, ஆனால் இதை ஏன் அல்லாஹ்வும் மலக்குகளும் சொல்வதுடன் நம்மையும் சொல்லச் சொலகிறான் என்ற உள் அர்த்தத்தை நோக்கும் போது, ஹதிஸே குத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள் ‘அன மின் நூரல்லாஹ் குல்லு மின்னுரி’ நான் இறையொளியிலிருந்தும் மற்றப் படைப்பினங்கள் எல்லாம் என் ஒளிpயிலிருந்து படைக்கப்பட்டன’ என்றும் ஆக ரஸீல் (ஸல்) அவர்கள் மீது கூறும் ஸலவாத் இந்த பிரபஞ்சம் முழுவதின் மீதும் சாந்தி உண்டாவதாக என்ற அர்த்தத்தை தாங்கி நிற்கிறது.

அகிலங்களின் அருட்கொடையான மானிடத்தின் மீது பேரன்பு கொண்ட ரஸீல் (ஸல்) அவர்களும் ‘என் மீது யார் ஒருவர் ஒரு ஸலவாத் சொல்கிறரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை ஸலாவாத் சொல்வதாக’ சொல்கிறார்கள். நாமும், மலக்குகளும் நபி பெருமான் மீது ஸலவாத் சொல்ல சொல்ல அனைத்து ஜவராசிகளின் சாந்திக்காக துஆ செய்கிறோம். அல்லாஹ் ஸலவாத் சொல்வது இந்த பிரபஞ்சம் முழுவதும் சாந்தியுடன் இருக்க ஆசிர்வதிப்பதாகும்.

வேளிபடையாக நபிபெருமான் மீது ஸலாவாத் சொல்வது அல்லாஹ் அவர்கள் தரஜாவை மேன் மேன் உயர்த்த வேண்டி துஆ செய்வது. அந்தரங்கம்மான அர்த்தம் அனைத்து படைப்புகளுகும் சாந்தி வேண்டி துஆ செய்வது.
சாந்தி என்பது அல்லாஹின் மிகப் பெரும் அருட்கொடை அதை அல்லாஹ்வை அன்றி யாரும் கொடுக்க முடியாது. அதை நமக்கு அளிக்கவே நபி பெருமான் மீது ஸலவாத் சொல்ல சொல்கிறான்.

அல்லாஹ் நம் மீதும் இப்பிரபஞ்சத்தின் மீது பேரருள் புரிவானகவும், நபி (ஸல்) அவர்கள் மீது பாலை மணல்களின் எண்ணிக்கை அளவிலும் இறைவன் படைத்த ஜிவராசிகளின் எண்ணிக்கை அளவிலும் ஸலவாத் சொல்வோமாக ஸல்லல்லாஹீ அலா முகம்மது ஸல்லல்லாஹீ அலைகி வஸல்லம்.

கருத்துகள் இல்லை: