ஞாயிறு, நவம்பர் 08, 2009

நான் - நீ



அந்தி வரும் நேரமெல்லாம்
புன்னகை சிந்தி வரும்
புது மலரே - நான்
சிந்திக்கும் நேரமெல்லாம் - என்
சிந்தையிலே வரும் உருவே

உன் முழு மதி முகம்
காணும் போதெல்லாம்
நான் முதல்வனாய்
முடிசூட்டிக்கொள்வேன்
நீ வீதி உலா வரும்போது - நான்
பாதி நிலவாய் பாதையில் நிற்பேன்
ஒரே ஒரு பார்வை
பார்த்து விட்டு போ - என்
முகம் முழு நிலவாகிவிடும்

உன் சின்ன விழி
விண்மீனாய் சிரிக்கயில் - என்
இரவு பொழுது பிரகாசமடையும்
உன் பட்டு பார்வை
பட்ட பத்து நிமிடத்திற்கு
மனசுக்குள் பட்டாம் பூச்சி

உன் விடிவெள்ளிக் கண்களை
கண்டது முதல்
எனக்கு விழி மூடா
இரவுகள் பல
இந்த விடுகதைக்கு
விடை சொல் மலரே

4 கருத்துகள்:

மலர்வனம் சொன்னது…

Roja poovai boondra....
Then sinthum....
Apple Thundu mathiri....
No.... No..... antha alaghana Vuthadukalai Varnikka varthaikalai thedukireen....

Syed

Rajakamal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
syed

சத்ரியன் சொன்னது…

//உன் விடிவெள்ளிக் கண்களை
கண்டது முதல்
எனக்கு விழி மூடா
இரவுகள் பல
இந்த விடுகதைக்கு
விடை சொல் மலரே...//

ராஜ்கமல்,

நான் சொல்லவா?

"காதல்".

கவிதை நடை அருமை.

Rajakamal சொன்னது…

ஆம் "காதல்" அதை சுவைத்தவர்களுக்கு மட்டும் தான் அதன் சுவையும் தெரியும், சுமையும் தெரியும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சத்ரியன்