வியாழன், செப்டம்பர் 04, 2008

குரு நாதர்


குரு நாதர்
மாநபியின் பேரரே
மன்னருக்கு மன்னரே
மறை ஞானம் தந்து எங்கள்
மனம் கவர்ந்த வள்ளலே
சாந்த நபி சொல்லியதை
பாந்தமாக எத்தி வைக்கும்
எந்தலரே எங்கள் குரு நாதரே
பொத்தி வைத்த செய்தி எல்லாம்
மற்றவர் பொத்தி வைத்த செய்த எல்லாம்
எத்தி வைத்தார் எங்கள் குரு
நித்தம் ஞான செய்தி சொல்லி
சித்தம் தினம் மகிழ வைத்த
எங்கள் குரு உயர்வு தனை
என்ன சொல்லி நான் புகழ்வேன்
சத்தியத்தின் சாறெடுத்து
சத்தியமாய் தந்ததெங்கள்
தங்க குரு தானென்பேன்
படைத்தவனும் படைபினமும்
பாருலகும் வானுலகும்
பரந்தவெளி கிரகங்களும்
ஒன்றென்று ஓதி தந்த
எங்கள் குரு உயர்வு தனை
என்ன சொல்லி நான் புகழ்வேன்
மறை ஞான பேழை தன்னை
மாண்புடனே திறந்து வைத்து
ஞான சோறு உண்ண தந்த
அன்பு தந்தை நலம் வாழ
வல்லவனை இறைஞ்சுகிறேன்

கருத்துகள் இல்லை: