வியாழன், செப்டம்பர் 04, 2008

பேரொளியே


பேரொளியே
சத்தியத்தை கொண்டு வந்த சத்தியமே
உங்கள் புகழ் இந்த உலகில் என்றும் நித்தியமே
இந்த மாநிலத்தின் மாற்றம் உங்கள் மாட்சிமையே
மனிதன் மடமை தனை போக்கி வைத்த மாநபியே
அறிவுக்கெல்லாம் அறிவு தந்த பேரறிவே
அகிலம் ஒளிபெறேவே வந்துதித்த பேரொளியே
மாமறையை தங்கி வந்த மன்னவரே
மனிதனை மனிதனாக வாழ வைத்த அருட்பிழம்பே

இந்த பிரபஞ்சம் புகழ் பாடும் முதல் படைப்பே
அந்த மூலவனம் முதலவனனின் முகவரியே
அர் - ரஹ்மான் அனுப்பி வைத்த அருட்கொடையே
மக்க நகர் கண்டெடுத்த மாணிக்கமே
அன்னை ஆமினா ஈன்றெடுத்த அற்புதமே
உங்கள் முத்து முகம் காணவேண்டும் பேரழகே
சில கோரிக்கைகள் உங்கள் முன்னே ஆருயிரே
மறுமையிலும் எங்கள் மானம் காக்க வேண்டும்
எங்கள் மாநபியே
அங்கேயும் உங்கள் அருகிலாக
ஆசிக்கிறேன் அடியவனே
அருள் புரிய வேண்டும் எங்கள் பெருமானே
இன்று உங்கள் புகழ் பாடும்
பேரு பெற்றேன் சிறியவனே
ஏற்று அருள வேண்டும் எங்கள் எஜமானே











கருத்துகள் இல்லை: