சனி, செப்டம்பர் 06, 2008

நீ


நீ


ஆழ் கடலில் நீலமாய்

அந்தி வானில் மஞ்சளாய்

குளிர் நிலவில் வெண்மையாய்

மலைகளில் கருப்பாய்

இருளாய்

ஒளியாய்

என்னிலடங்க வண்ணங்கள் உனக்கு

கொட்டும் அருவியில் உன் குரல்

வீசும் காற்றில் உன் குரல்

ஓடும் நதியில் உன் குரல்

அலையின் எழுச்சியில் உன் குரல்

குயிலின் கூவலில் உன் குரல்

எழுகின்ற ஓசையெல்லாம் உன் குரல்

காற்றில் உன்னையே சுவாசிக்கிறேன்

இந்த பிரபஞ்சத்தில் உன்னையே வாசிக்கிறேன்

எங்கும் எப்போதும் உன்னையே நேசிக்கிறேன்

உன்னையே உன்னிடம் யாசிக்கிறேன்

எல்லாம் நீயாக பாவிக்கிறேன்

மலர்களில் மணமாய் மகிழ்விகிறாய்

தென்றலாய் சுகமாய் குளிர்விகிறாய்

சின்னதாய் சில நேரம் சோதிகிறாய்

துன்பத்திற்கு பின் இன்பம் என்று போதிகிறாய்

உலகின் மூலமே

ஓங்கார நாதமே

சிரம் பணிந்தேன் உன் பாதமே.

கருத்துகள் இல்லை: