ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

சுவாசம்


சுவாசம்

உன் சாயம் பூசாத உதடுகளில் அல்லவா
என் உள்ளம் பரிக்கொடுத்தேன்

பவுடர்களின் பரிச்சயம் காணத
உன் தங்க முகத்தில் அல்லவா
என் முகம் மறந்தேன் - ஐயோ

உன் நினைவுகளின் துரத்தல்
ஓடுகிறேன் ஓட்டத்தின் முடிவிலும்
உன் முகம்

மறக்க முயலுகிறேன் - அது
இறப்பிற்கு பின் தானோ
என் செய்வேன் என்னவளே

இயன்ற மட்டும் விட்டு விட்டேன்
ஆனாலும் உன் நினைவு மொட்டுகள்
மனதுக்குள் மலர்ந்துக் கொண்டு தான்
இருக்கின்றன

மலரைப் பார்க மாட்டேன் என்று
கண்களை மூடிக்கொண்டேன் - ஆனால்
அது பரப்பும் மணத்தை

நான் சுவாசிக்க வில்லை என்றால்
மரணித்து விடுவேன்
உன் நினைவுகள்
என் சுவாசம் கண்ணே

கருத்துகள் இல்லை: