ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

ராசாத்திக்கு


ராசாத்திக்கு

கண்ணுக்குள்ள ஒன்ன வச்சு
காலம் பூரா காத்திருப்பேன்
நெல்லுக்குள்ள அரிசிப் போல
நெஞ்சுக்குள்ள ஓன்ன வச்சு
காலம் பூரா பாத்திருப்பேன்
என் எள்ளுப் பூ ராசாத்தி
ஒரு சொல்லு ஒன்னு சொல்ல வேணும்
பக்குவமா பார்த்து சொல்ல
பாக்குத் தோப்பில் காத்திருப்பேன்
உன் கன்னங் கரு விழியும்
கன்னிப் பேசும் கிளி மொழியும்
நெஞ்சுக் குள்ள நீ விட்;ட
ஏவு கணை ஆனதடி
மாலை வெயில் வேளையிலே
மயிலு வரும் சோலையிலே
சோடி தேடும்; ஜாதிப் புறா
சோகமாக நிக்குதடி
சொன்ன வேளை வந்த பின்பும்
சொன்னவளை காணவில்ல
சோகம் வந்து நெஞ்சுக் குள்ள
சௌக்கியமா என்றதடி
வேதனையில் வார்த்த வல்ல
என்னவளை என்ன சொல்ல
உன் கன்னக் குழியினிலே
நான் தடுக்கி விழுந்து புட்டேன்
என் நெஞ்சக் குழியினிலே
ஒன்ன வச்சு மூடிப் புட்டேன்
ஒரு மல்லிகை பூ இங்க
மணந் தேடி நிக்குதடி
மனமிறங்கி நீ கொஞ்சம்
மனசெல்லாம் மணக்க வாடி
என் மனசெல்லாம் மணக்க வாடி

கருத்துகள் இல்லை: