வியாழன், செப்டம்பர் 18, 2008

சுதந்திரம்

சுதந்திரம்

சுதந்திரம் கேட்ட எங்களுக்கு
வெள்ளையன் தந்தது விடுதலை
சுதந்திர இந்தியாவில்
எங்களுக்கு அதிகம்
கிடைப்பது அரிவாள் வெட்டு
வாழ்கையே வாள் முனையில்
என்றாகி விட்டபின்
யாருக்கு இங்கு vaalkai பற்று

ஆள்பவர்களே அழிப்பவர்களாகி
விட்ட இந்த தேசத்தில்
தேசத் தாய் மோசம் போய் விட்டாள்
பாவம் காந்தி
47 ன் நினைவுகளோடு
நாடெங்கும் சிலையாய் நிற்கிறார்

அகிம்சை போதித்த நகரில்
அரக்கர்களின் அட்டகாசம்
உரிமைக்கு போரடுபவர்களுக்கு
தேசம் தந்த பட்டம்
தீவிரவாதி

ஒ. . . இந்திய தாயே
உன் மக்களுக்கு
சம நீதி கிடைக்க
மீண்டும் ஒரு
காந்தி கொடு
எங்களுக்கு சாந்தி கொடு

கருத்துகள் இல்லை: