சனி, செப்டம்பர் 20, 2008

நெரிசல்கள்

நெரிசல்கள்

அந்த சோகத்திலும்
சொல்ல ஒரு சுகம் உண்டு
மலைக் குவியலை
மலர் குவியலாய்
நம்பும் மனங்கள்

என் சுமைக்கு
ஒரு பேருண்டு
பூக்களிளும்
போர்க் குணம்
நெருங்கிப் பாருங்கள்

புல்வெளியாய் தெரியும்
தூரத்து பச்சைகள்
கால் வைத்து பாருங்கள்
தெரியும் முள்வெளி என்று

சுகம் அளிக்கும்
விசயங்களில்ளெல்லாம்
மறைந்திருக்கும் சோகம்

பொக்கிசம்
கையிலிருப்பது தெரியாமல்
புதையல் தேடும் கூட்டம்

ஏன் என் தனிமையிலும்
எண்ண நெரிசல்கள்
இருப்பது இருட்டறை
இருந்தாலும் மனசுக்குள்
வெளிச்சம்.

கருத்துகள் இல்லை: