திங்கள், செப்டம்பர் 08, 2008

நட்பு

கண்டங்கள் கடந்து விட்டாலும்
நெஞ்சில் கனன்று கொண்டிருக்கும்
உறவு
அந்த உறவு

காலங்கள் கடந்து விட்டாலும்
கடல் அலையாய்
மீண்டும் மீண்டும்
இதயத்தை நனைக்கும்
இன்றும் அந்த உறவு


அன்னையிடமும் அருமை
மனைவியிடமும்
பகிர முடியாத அந்தரங்களைஎல்லாம்
பகிர்ந்து கொள்ளும்
அற்புத உறவு அந்த உறவு


சோகங்களையும்
தாகங்களையும்
பகிர்ந்து கொள்ளும்
சத்தான உறவு
அந்த உறவு


உள்ளத்திலும் உதட்டிலும்
ஒருமித்திருக்கும் உறவு
அந்த உறவு


இதற்கு
தாய் வழியும் இல்லை
தந்தை வழியும் இல்லை


அது ஒரு சோகங்களை
இறக்கி வைக்கும்
சுமை தாங்கி

அது ஒரு மகிழ்ச்சியை
பகிர்ந்து கொள்ளும்
பள்ளிக்கூடம்

அது ஒரு பட்டம் பூச்சியாய்
பறந்து மகிழ்ந்த
மலர் வனம்

அது
ஒரு மாறாத
மணம் வீசும் நந்தவனம்


சொற்களால் வடிக்க அது
கம்பர் கால காவியமும் அல்ல
கற்களில் வடிக்க
அது சோழர் கால சிலையும் அல்ல

அது நதியோரத்து

தென்றலின் சுகம் அது
கோடை மலையின்
சாரலின் சுகம் அது

உள்ளத்தால் மட்டுமே

உணர்ந்து கொள்ளும்

அற்புத உணர்வு அது

இந்த உறவுக்கு மட்டும்

என்னவோ தெரியவில்லை

வயசவதே இல்லை

இது ஒளிர்ந்து மறையும்

மத்தாப்பு அல்ல

இது பூத்து உதிரும்

உதிரிபூவும் அல்ல

உதிரும் பூக்கள்

உள்ள உலகில்

உதிரா பூ

இந்த நட்பு

சில நேரங்களில்

சில மனிதர்களிடம்

ஒரு முறை மட்டுமே

பூக்கும் அதிசய பூ

இந்த நட்பு















3 கருத்துகள்:

கிளியனூர் இஸ்மத் சொன்னது…

நட்பு கவிதை மிக அருமை
வாழ்த்துக்கள்

கிளியனூர் இஸ்மத்

Rajakamal சொன்னது…

tUif je;jjw;F ed;wp ez;gh; ,];kj;
mth;fNs NkYk; cq;fs; tpkh;rdq;fis
tuNtw;fpNwd;

Rajakamal சொன்னது…

வருகை தந்ததற்கு நன்றி நண்பர் இஸ்மத்
அவர்களே மேலும் உங்கள் விமர்சனங்களை
வரவேற்கிறேன்