சனி, செப்டம்பர் 20, 2008

இருள்



இருள் திரையில் தோன்றும்
ஒளிக் கோலங்கள் தான்
இந்த பிரபஞ்சப்
பெருவெளி

இதில் தோன்றும்
வெளிச்சப் புள்ளிகள்
இடையில் தோன்றி
இடையில் மறையும்
இடைக்கால நிவாரணம்

இந்த பிரபஞ்சம்
இருளில் தான் மிதக்கிறது
சூரியனின் முகம் காணா
பூமியின் மற்றொரு பக்கம்
மூழ்கி இருப்பது
முழு இருளில் தான்

சூரியனின் ஒளி படருவது
ஒரு சில கோளங்களின்
ஒரு பக்க முகப்பில் தான்
அதையும் தாண்டி
அடர்ந்து இருப்பது
இருள் மட்டும் தான்

இருள் இரவில்
மட்டுமல்ல
இருப்பதே இருள் தான்
சில மணி நேர
வெளிச்சம் தான்
பகல் என்ற மாயையைத்
தோற்றுவிக்கிறது

இங்கு வெளிச்சம் தான்
உண்டாக்கப் படுகின்றன
இருள் அல்ல
இயந்திரங்கள்
ஒளிக்கற்றைகளை
உண்டாக்கும்
இருளை அல்ல

ஒளியின் அருமை
இருளில் தான்
ஒளியைப் பார்க
இருள் வேண்டும்
பொருளை பார்க்க
ஒளி வேண்டும்
ஆனால் இருளைப் பார்க்;;க
இருள் தான் வேண்டும்

பூமி என்ற
புள்ளியை காட்டுவது
வெளிச்சம்.
பிரபஞ்சம் என்ற
பிரமண்டத்தை காட்டுவது
இருள்

இருள்
நிகழ் காலங்களை
மறக்க வைத்து
நித்தியனை
நினைக்க வைப்பது

இருள்
ஆன்மாவிற்கு
அமைதி தரும்
அரும் மருந்து


இருள்
கருப்பை
குழந்தை காணும்
முதல் உலகம்

இருள்
நம் மீது
இறைவனின்
பேரருள

கருத்துகள் இல்லை: