சனி, செப்டம்பர் 20, 2008

கை குலுக்குவோம்

கை குலுக்குவோம்

காற்றோடு மேகம்
கை குலுக்கும் போது தான்
மழையாகிறது
மண்ணோடு மழை
கை குலுக்கும் போது தான்
வளமாகிறது
வண்டோடு மலர்
கை குலுக்கும் போது தான்
கனியாகிறது
உளியோடு கல்
கை குலுக்கும் போது தான்
சிலையாகிறது
விரலோடு வீணை
கை குலுக்கும் போது தான்
இசையாகிறது
நாடோடு நாடு
கை குலுக்கும் போது தான்
நட்பாகிறது
கண்ணோடு கண்
கை குலுக்கும் போது தான்
உருவங்கள்
பரிமாறப் படுகிறது
உடலோடு உடல்
கை குலுக்கும் போது தான்
சந்ததியாகிறது
மலரோடு மலர்
கை குலுக்கும் போது தான்
மாலையாகிறது
சூட்டோடு சுடர்
கை குலுக்கும் போது தான்
சுவாலை ஆகிறது
மனிதனோடு மனிதன்
கை குலுக்கும் போது தான்
உறவு வலுவாகிறது


இயற்கை எல்லாம்
கை குலுக்கி மனிதனுக்கு
கற்று தருகிறது
கண்டவுடன் கைகுலுக்குவோம்
உறவை வலுபடுத்துவோம்
இதையெல்லாம்
பேப்பரோடு பேனா
பேசும் போது தான்
கவிதையாகிறது

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

அருமை