வியாழன், செப்டம்பர் 18, 2008

மண்

மண்

மனிதனின் உயிர் சத்து மண்
விதையை விழுங்கி
விருட்சம் தருவது மண்
தங்கத்தையும் வைரத்தையும்
தன்னுள் கொண்டது மண்
ஆனலும் மமதை என்பது
மண்ணுக்கு தெரியாது

எண்ணிலடங்க உயிரினங்களை
தன்னில் சுமப்பது மண்
விண்ணவரும் வந்து போகும்
சிறப்பு பெற்றது மண்
மலர்களுக்கெல்லாம் மணத்தை
தருவது மண்
உயிர்களுக்கெல்லாம்
உணவை தருவது மண்
ஆனலும் மமதை என்பது
மண்ணுக்கு தெரியாது

விண்ணுயர்ந்த கட்டிடங்களை
தாங்கி பிடித்திருப்பது மண்
நல்லவர்கும் கெட்டவர்கும்
மடி தருவது மண்
ஆனலும் மமதை என்பது
மண்ணுக்கு தெரியாது

விந்தை பல தன்னில்
கொண்டது மண்
விதைக்கப்பட்ட விதைகளை
முளைப்பிப்பது மண் - ஆனால்
புதைக்கப்பட்ட மனிதர்கள் மீண்டும்
மண்தான் என்பதை
நிருபிப்பது மண்

கனி தருவது மண்
மணி தருவது மண்
மனிதனை தந்ததும் மண்
மருந்துக்கு மண்
விருந்துக்கு மண்
தேடியதை கொடுக்கும்
தெய்விக மண்
ஆனலும் மமதை என்பது
மண்ணுக்கு தெரியாது

கருத்துகள் இல்லை: