ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

வருவாயா நீ


வருவாயா நீ

நெஞ்சுக்குள் நேசமாய் நீ
கண்ணுக்குள் கனவாய் நீ
கனவுக்குள் நிலவாய் நீ
வார்த்தைகளில் கவிதையாய் நீ
உடலுக்குள் உயிராய் நீ
வசந்ததில் தென்றலாய் நீ
வாலிபத்தின் வனப்பாய் நீ
வாழ்கையின் தேடலாய் நீ
வயோதிகத்தில் அரவணைப்பாய் நீ
வருத்தத்தில் வருடலாய் நீ
வாசிப்பில் புத்தகமாய் நீ
யோசிப்பில் சிந்தனையாய் நீ
மனசுக்குள் மழையாய் நீ
மாளிகையில் விளக்காய் நீ
உணர்வுகளில் மகிழ்வாய் நீ
பிணிகளில் மருந்தாய் நீ
என் உணவுகளில் விருந்தாய் நீ
நான் தேடும் உறவாய் நீ
என் தேர்வுகளில் அறிவாய் நீ
என் பார்வையில் பரிவாய் நீ
என் உதட்டுக்குள் இனிப்பாய் நீ
என் தேவைக்கு போர்வையாய் நீ
என் அழகுக்கு ஆடையாய் நீ
என் இருட்டுகளில் ஒளியாய் நீ
என் லட்சியத்தின் நம்பிக்கையாய் நீ
என் இரவுகளின் விடிவெள்ளியாய் நீ
என் விடியலின் சூர்யோதயமாய் நீ
என் சோகத்தின் சுமை தாங்கியாய் நீ
என் தாகத்தில் தண்ணீராய் நீ
என் சுவாசத்தில் காற்றாய் நீ
வாழும் காலமெல்லாம்
வாழ வேண்டும்
வருவாயா நீ

கருத்துகள் இல்லை: