
அவள் 07.06.03
நீங்கள் மொட்டுகள்
மலர்வதை பார்ததில்லையே
அவள் புன் சிரிப்பை பாருங்கள்
மீன்கள் சிறகடித்து
பார்ததில்லையே
அவள் கண்களைப் பாருங்கள்
நிலவுக்கு நாசி வைத்துப்
பார்ததில்லையே
அவள் முகத்தைப் பாருங்கள்
கொடி ஆடைக் கட்டிப்
பார்ததில்iயே
அவள் இடையைப் பாருங்கள்
தென்றலுக்கு கால் முளைத்து
பார்ததில்லையே
அவள் நடையைப் பாருங்கள்
சித்தாரின் சிணுங்கள்
கேட்டதில்லையே
அவள் சிரிப்பொலி கேளுங்கள்
ஒரு கவிதை கையசைத்துப்
பார்ததில்iயே
அவள் கையசைவைப் பாருங்கள்
வெண்ணிலா வீதி வந்துப்
பார்ததில்லையே
அந்தப் பெண்ணிலவைப் பாருங்கள்
பின்னலிட்ட மின்னலைப்
பார்ததில்லையே
அவள் வீட்டு ஜன்னலைப் பாருங்கள்
என் பக்கம் வீசாத என
ஏங்க வைக்கும் அவள்
ஒரு பாவடைக் கட்டிய
பருவக்காற்று
பார்வை பட்டாலே
மனதுக்குள்
மழை பெய்ய வைக்கும் அவள்
ஒரு மலர் வைத்த மழை மேகம்
அவளை
உங்களுக்கும் காட்ட ஆசைதான்
என்ன செய்ய
அவள் கனவு முடிந்ததும்
மறைந்துவிடும் மாயக் கன்னி
1 கருத்து:
nandraga ullathu.
Nandri
Ani
கருத்துரையிடுக