ஞாயிறு, செப்டம்பர் 21, 2008

பிரிவு


பிரிவு

உணர்வுகளின் கொந்தளிப்பில்
உருகிப் போகிறேன்
உயிரே உனை விட்டு நான்
விலகிப் போகிறேன்
உன் உயிருக்குள் என்
உயிரை புதைத்து போகிறேன்
உயிரின்றி வெறும் உடலாக
திரும்பிப் போகிறேன்
வெறும் உடலோடு உயிருக்காய்
காத்து நிற்கிறேன்

உனை நேசித்த காலங்களை
நினைவில் கொள்கிறேன்
அந்த நினைவுகளால்
நான் இன்று சுவாசிக்கின்றேன்
நெஞ்சுக்குள் ஒரு கவிதை வாசிக்கின்றேன்
அதை நேரில் உனக்கு சொல்ல
மிகவும் ஆசிக்கின்றேன்

பிரிவு எனும் பெருங்கடலில்
தத்தளிக்கிறேன்
சில நேரம் உன் நினைவு எனும்
படகினிலே பயணிக்கிறேன்
காலம் வரும் என்று நானும்
காத்திருக்கிறேன்
இப்போதெல்லாம் நான் உன்னை
கனவில் மட்டுமே
கை பிடிக்கிறேன்




தென்றலாய் நெஞ்சுக்கு
சுகமளிக்கிறாய்
தீயாய் சில நேரம்
சுட்டு வைக்கிறாய்
நீ இல்லாத நேரங்களிலும்
சிரிக்க வைக்கிறாய்
நீ இருந்தும் சில நேரம்
அழுக வைக்கிறாய்

உணர்வுகளால் பொம்மை போல
ஆட்டுவிக்கிறாய்
உன் நினைவுடனே நித்தம் என்னை
உறங்க வைக்கிறாய்
கனவில் கூட வந்து என்னை
கலகம் செய்கிறாய்

சந்திக்கும் நாளொன்றை
சொல்லி அனுப்பு
இனி தாங்காது
என் மனசோட தொண தொணப்பு

கருத்துகள் இல்லை: